23

1.7K 121 93
                                    

அடுத்த நாள் காலை அனைவருக்கும் இனிமையானதாய் விடிய விஷாகனிற்கோ நரகமாய் விடிந்தது. ஆம் இன்று அவர்கள் குறிப்பிட்ட அந்த பௌர்ணமி ,இன்று அவனின் தவப்புதல்விகள் இருவரையும் அவன் கைகளாலேயே அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு வரவேண்டும் .எந்த ஒரு தகப்பனிற்கும் வரக்கூடாத நிலை தான் பெற்ற பிள்ளையின் மரணநாளை அறிந்தே அவர்களிற்கு பிறப்பை கொடுப்பதென்பது. எனில் விஷாகன் இன்று அந்த நிலைமையில் தான் இருந்தான் .

தன் மகள்களையே பார்த்துக்கொண்டிருந்தவனின் நினைவடுக்குகள் பின்னோக்கி சென்றது .நாகநேயனிற்கு இரு புதல்வர்கள் முதலாமவன் நாகநேயனிற்கு தப்பாது பிறந்தவன் பெயர் நீலகாந்தன். சம்ஹித்த வம்சத்தின் சிம்மசொப்பனம் அவனே. அவனை கண்டால் எந்த கோர அரக்கனும் பயந்து போவான் அத்தனை கொடூரம் நிறைந்தவன் மாந்திரீகத்தில் தலை சிறந்தவன் ,ஆருத்ராவிற்கு இப்படி ஒரு கண்டம் உள்ளதென்பதை ஆதவக்குலத்தில் ஒருவரும் அறியார் எனில் அவளின் ஜென்ம ஜாதகத்தை வைத்து இத்தகைய புதைகுழி ஒளிந்திருப்பதை கணித்து அதற்காக காய் நகர்த்த துவங்கியவன் அவனே .

அவனை விட பத்து வயது இளையவன் விஷாகன் அந்த குலத்தவர்கள் மூர்க்கம் சற்று இருந்தாலும் வெளியுலகத்திலேயே உறவாடியதாலோ அவனின் அன்னையின் மென்மை குணத்தாலோ இயற்கையிலேயே நல்லவன் அவன் .ஆருத்ராவின் ஜாதகப்படி ஆதவகுலத்தை சேர்ந்த அவளிற்கு சம்ஹித்த வம்சத்தை சேர்ந்த ஒருவனுடன் திருமணம் நிகழ்ந்து வாரிசுகள் உருவானால் அவளின் தெய்வ சக்திகள் மொத்தமும் பறிபோய் மாந்த்ரீகத்தை சுத்தமாய் பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவாள் .எனில் அவளின் சக்திகளை விட இருமடங்கு சக்திகளை பெற்றதாய் அவளின் மகவுகள் இருக்கும் .

எனில் சம்ஹித்த வம்சத்தவன் என்று தெரிந்தாலே ஆதவக்குலத்தவர் வெறுப்பெனும் தீயை உமிழ நேர்வழியில் இதை சாதிக்க முயல்வதென்பது கண்ணை கட்டிக்கொண்டே அடர்ந்த காட்டிலிருந்து வெளியே வர வழிதேடுவதற்கு சமமாகும். எனவே விஷாகனை சம்ஹித்த வம்சத்தவன் என்று யாரும் கண்டுகொள்ளாது இருக்க அவனின் அடையாளத்தை மறைக்க ஒரு மகாயாகம் செய்தான். அதில் அவனது மொத்த சக்திகளும் விரயமானது .

ஆதிரா(முடிவுற்றது)Where stories live. Discover now