4

2.6K 163 139
                                    

அடுத்த நாள் காலை புதுப்பொலிவுடன் விடிய தன் அறையில் குளித்து முடித்து தனது உடமைகள் நிறைந்த பையுடன் வெளியே வந்தால் ஆதிரா .பெட்டியை தூக்க முடியாமல் தூக்கி கொண்டு வந்தவள் அதை ஹாலில் நடுவில் வைத்து விட்டு"பாப்ஸ் மீ ஊருக்கு கிளம்புறேன் வந்து வழி அனுப்புங்க "என்று விட்டு பூஜை அறைக்கு சென்று நிற்க அவர்களிடமிருந்தோ எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லை .

சற்று நேரம் அப்படியே நின்றவள் "பாப்ஸ் மீ காதுல விழலையா ?,வாங்க ரெண்டு பேரும் "என்று வெளியே வர அவள் கண்டதோ டைனிங் tableலில் சோகமே உருவாய் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டு அமர்ந்திருந்த தன் பெற்றோரை தான் .

அவர்களிடம் சென்று நின்றவள் இருவரின் தோளிலும் கை வைக்க அவர்களோ அந்த சொரணையும் இன்றி அப்படியே அமர்ந்திருந்தனர் . .

அவள் வந்து நின்றது கூட தெரியாமல் ஏதோ யோசினையில் சிக்கி இருந்த இருவரையும் இடையில் கை வைத்து முறைத்தவள் பின் அவர்கள் தோளில் கை வைத்து உலுக்கிக்கொண்டே"பாப்ஸ் மீ "என்று கத்த ஏதோ கனவில் இருந்து விழிப்பவர்கள் போல் விழித்தனர் இருவரும் .

அவர்கள் இருவரையும் கண்டு முறைத்தவள் "இங்க ஒருத்தி ஊருக்கு போறேன்னு காட்டு கத்து கத்திக்கிட்டு இருக்கேன் அங்க என்ன ரெண்டு பேரும் இந்த வயசுல கண்ணும் கண்ணும் நோக்கியா பண்ணிக்கிட்டு இருக்கீங்க? "என்க

அவளின் தந்தையோ "ஒன்னும் இல்லடா குட்டிமா ஏதோ யோசனைல இருந்துட்டோம் சாரி டா"என்க

அவளோ விஷமமாய் சிரித்தவள் "அப்டி என்ன ஆழ்ந்த சிந்தனை ஓஓஒஹ் நா இல்லாத ஒரு மாசத்துல எனக்கு தம்பி பாப்பா கொண்டு வரலாம்னு யோசிச்சீங்களா"என்று கூறி கண்ணடிக்க

அவளின் அன்னையோ சகஜமாய் மாறியவர் கையில் அருகில் இருந்த பூரிக்கட்டையை எடுத்துக்கொண்டு "கழுதை அப்பா அம்மாட்ட பேசுற பேச்சாடி இது? "என்று கேட்டுக்கொண்டே துரத்த

அவளோ போக்கு காட்டிக்கொண்டே ஓடியவள்"அம்மா அம்மா விட்டுருமா உன் புள்ள பாவம் மா ஏதோ அறியா புள்ள தெரியாம கேட்டுட்டேன் மன்னிச்சூ "என்று சரணடைய

ஆதிரா(முடிவுற்றது)Where stories live. Discover now