35

2.3K 142 83
                                    

அந்த கதவில் இருக்கும் வெவ்வேறு வண்ணத்திலான எழுத்துக்கள் என்ன கூற வருகிறதென்று தெரியாமல் இருவரும் முழிக்க அந்த தீப்பந்தம் எப்பொழுது வேண்டுமென்றாலும் அணைந்து விடுவதை போல் இருந்தது . ஆராதனாவோ இது வேறா என்று நினைத்தவள் அருகே ஏதேனும் குடுவை போல் இருக்கிறதா என்று தேட அங்கே கதவின் இரு புறமும் எண்ணெய் நிறைந்து திரியுடன் இரு பெரிய ஆளுயர விளக்குகள் இருந்தது .

அதை கண்டு நிம்மதி பெருமூச்சு விட்ட சகோதரிகள் அந்த கதவை அப்பொழுதே ஊன்றி கவனிக்க ஆரம்பித்தனர் .யோசித்துக்கொண்டே இருந்த ஆராதனாவின் மொழியில் அவளின் பாட்டி உதிர்த்த "காக்கும் தெய்வமான விஷ்ணுவும் அழிக்கும் தெய்வமான சிவனும் ஒரே கோட்டில் சந்திக்கும் போதே அவனை காக்க வழி பிறக்கும் "என்ற வார்த்தைகள் மூளைக்குள் ரீங்காரமிட்டு அந்த கதவையே ஆழ்ந்து நோக்கினாள் ஆதிரா .

சற்று நேரம் அதை உற்று நோக்கியவளிற்கு ஏதோ தோன்ற பின் எதையோ கண்டுபிடித்த பாவனையை கொண்ட ஆதிரா ஆராதனாவின் தோளை சுரண்டினால் ."அக்கா அக்கா அக்கா இங்க பாரேன் "என்று அவள் முதுகிலேயே அடிக்க

ஆராதனாவோ "அடியேய் அடியேய் என்னடி என்னடி ஏண்டி அடிக்குற?" என்று கேட்க ஆதிராவோ அதிவேகமாய் அந்த ஒரு கதவிலிருந்த எழுத்துக்களை மாற்றி மாற்றி பொறுத்த ஆரம்பித்தாள் .

ஒற்றை கதவில் அவள் ஐந்து நிமிடமாய் எழுத்துக்களை மாற்றி மாற்றி வைக்க கொஞ்சம் கொஞ்சமாய் அந்த கதவின் ஒரு பாதி பெருமாளின் பாதி உருவத்தை போல் ஓம் நமோ நாராயணா என்று வாக்கியம் திரும்பி திரும்பி வர அதை பார்த்தவள் மூலையில் மின்னல் வெட்ட இந்த கதவில் ஓம் நாம சிவாய என்று எழுத்துக்களை மாற்றி அமைக்க ஆரம்பித்தாள் .அந்த கதவு மிகவும் பெரிதாய் இருக்க ஐந்து நிமிடத்திற்கு ஒரு வரியில் பாதியை தான் இருவராலும் அடுக்க முடிந்தது .

விடாது முயன்று அவர்களும் ஆறு மணி நேரமாய் உணவின்றி தண்ணீரின்றி விடாமுயற்சியோடு அந்த கதவுகளின் எழுத்துக்களை வரிசை படுத்த இதோ கடைசி எழுத்தை இருவரும் ஒரே நேரத்தில் முடிக்க ஒருபுறம் பாதி உடலில் சிவனும் ஒரு புறம் பாதி உடலில் விஷ்ணுவும் இருக்க அந்த கதவின் நடுவே அமைந்திருந்த திருகு ஒன்று தானே சுழன்று அந்த கதவு தானாய் திறந்தது .அந்த ஆளுயர விளக்கின் அருகில் தொங்கிக்கொண்டிருந்த ஓர் சிறு விளக்கை கையில் ஏந்தியவர்கள் முன்னே நடக்க அங்கே அந்த விழுதுகள் மண்டிய இடத்தின் நடுவே கசிந்த வெளிச்சமும் அங்கிருந்த வந்த சத்தமும் அவர்கள் தேடி வந்தது அங்கே தான் இருக்கிறதென்று உணர்த்த வேக வேகமாய் அந்த இடத்தை அடைந்தவர்கள் அங்கிருந்த விழுதுகளை அங்கே இருந்த ஒரு கட்டையால் பிய்த்தெடுக்க அந்த விழுதுகளில் முளைத்திருந்த முற்கள் அவர்களின் மேனியின் பல இடங்களை வஞ்சனை இன்று பதம் பார்த்தது .

ஆதிரா(முடிவுற்றது)Where stories live. Discover now