ஆதிராவை பின்தொடர்ந்து ஆதேஷும் உள்ளே சென்றுவிட அவன் உள்ளே செல்வதைப்பார்த்த அஜய் வேகமாய் உள்ளே செல்ல போக அவன் கையை பிடித்து தடுத்தால் வேதித்யா "அஜய் வேணாம் கால உள்ள வைக்காத மறுபடி ஷாக் அடிக்கப்போவுது "என்க
அவனோ அதை எதையும் காதிலேயே போட்டுக்கொள்ளாமல் அவளையும் இழுத்துக்கொண்டு கோவிலின் வாசலில் காலை வைக்க அப்பொழுதை போல் மீண்டும் மின்சார தாக்கத்தை அவன் கால்களில் உணர்ந்தான் .அதிர்ச்சியாய் அந்த வாசலை நோக்கியவன் மனதில் "ஆதேஷால் மட்டும் எப்படி உள்ளே செல்ல முடிந்தது?" என்ற வினா முளைத்தது .
இவர்கள் இங்கே உள்ளே நுழைய அங்கே ஆதிராவோ ஆதேஷின் கைகளை பிடித்தவாறு ஒவ்வொரு அடியாய் எடுத்து வைத்து உள்ளே சென்றுகொண்டிருந்தாள்.
காரணமின்றி அவள் கண்கள் கலங்கியது பின் கடைசியாய் அந்த கோவிலில் ஒரு சிறு மண்டபம் போன்ற அமைப்பிற்கு வந்தவள் உள்ளே செல்ல அந்த மண்டபத்தின் தூண்களில் மூலைக்கொன்றாய் சிறு சிறு ஆபரணங்கள் சிதறிக்கிடந்தது .
பலவருடங்கள் ஆனதன் அடையாளமாய் அதன் மேல் அழுக்கு அளவிற்கதிகமாக படிந்திருக்க அதை எடுத்து வருடியவள் கண்களை அங்கிருந்த சிறு பை கவர அதை எடுத்து தன் கைபையிற்குள் போட்டுக்கொண்டாள் .
பின் அந்த மண்டபத்தை சுற்றி முற்றி பார்த்தவள் அங்கிருந்த ஓவியங்களை உற்று நோக்க அவளிற்கு லேசாய் தலை வலிப்பதை போல் உணர்ந்தாள் .அப்படியே பின்னோக்கி நகர்ந்து கொண்டே வந்தவளை அந்த மண்டபத்தின் மூலையில் அமைந்திருந்த சுவர் தடுக்க திரும்பி பார்த்தவள் கண்ணில் அகப்பட்டது அந்த சுவற்றில் அமைந்திருந்த ஓர் சிறுகதவு .
ஏதோ ஓர் உள்ளுணர்வு உந்த அந்த கதவின் முன் வந்து நின்றாள் ஆதிரா .அந்த கதவு தரையிலிருந்து நான்கடி உயரமே இருந்தது .உடலை முழுதாய் வளைத்து குனிந்தாள் மட்டுமே உள்ளே செல்ல முடியும் .அந்த கதவின் முன்னே ஏதோ திரை விழுந்தார் போல் படிந்திருந்த ஒட்டடைகளை தன் துப்பட்ட்டா கொண்டு தட்டியவள் அந்த கதவை பார்க்க முழுவதுமாய் அதிர்ந்தாள் என்றே சொல்ல முடியும் .ஏனெனில் இந்த கதவும் அவள் அரண்மனையின் வாயிலில் கண்ட கதவும் ஒரே மாதிரியான வடிவமைப்பில் அமைந்திருந்தன .