33

1.5K 118 28
                                    

அவன் கண்ட உருவத்தில் நீலகாந்தனின் விழிகள் ஆச்சர்யத்தில் விரிய அவன் முன் நின்றிருந்த உருவத்தின் முகத்திலோ ஏளனத்தின் சாயல் நீலகாந்தனின் வாய் தானாய் அவனின் பெயரை உச்சரித்து "வி....... விஷாகன் ..."என்று ஆம் அவன் முன் நின்றுகொண்டிருந்தது விஷாகன் தான் .

தலை துண்டிக்கப்பட்டு தன் மனைவியையும் மகள்களையும் காக்க வேண்டி தன் உயிரை துறந்த சம்ஹித்த வம்சத்தவன் விஷாகனின் பிரேத ஆத்மா தான் நீலகாந்தனின் முன் நின்றுகொண்டிருதது .அவனின் மரணத்தை வழங்க நின்றுகொண்டிருந்தான்.

அவனின் அரண்ட தோற்றத்தை பார்த்து இடி இடியென சிரித்தான் விஷாகன் "என்ன தமையனாரே ஆச்சர்யமாக உள்ளதா அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில அந்த அண்டத்தை ஆளும் கடவுளிற்கு மந்திர கட்டிட்டு ஏவல்கள்,பேய்கள்,பிசாசாசுகள் ,ரத்தம் குடிக்கும் கொல்லி வாய் பிடாரிகளின் பிடியில் பெட்டியில் அடைக்கப்பட்டு வைத்திருந்த இந்த விஷாகனின் ப்ரேதாத்மா எப்படி வெளியே வந்ததென்று யோசிக்கின்றாயோ? "என்க ஆராதனாவின் ஆதிராவுமோ ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டனர் நிகழ்ந்த நினைவுகளை புரட்டி பார்த்து .

(பிளாஷ் பாக் )

ஆதிரா அவளின் பாட்டியிடம் "மரணத்தின் ரகசியமா என்ன அது ?"என்று வினவ

அவரின் பதிலோ "அவனின் மரணம் விஷாகனின் கையாலேயே நிகழும் "என்க மூவருமோ குழம்பி போயினர் .

ஆதேஷ் "மாமாவின் கரங்களிலா எனில் அவரோ இருபது வருடங்களுக்கு முன்னே தலை துண்டாக்கப்பட்டு இறந்துவிட்டாரே "என்க

அவனை நோக்கி ஓர் கசந்த புன்னகை செய்த பாட்டியார் கூறத்துவங்கினார் "உடலிற்கு தான் அழிவுண்டு ஆத்மாவிற்க்கல்லவே .சம்ஹித்த வம்சத்தை பொறுத்தவரை அவ்வம்சத்தவருக்கு அவ்வம்சத்தை சேர்ந்தவர்களின் கரத்தை அன்றி மற்றோரின் கரத்தினின்று மரணம் தழுவாது .ஆதலால் தான் அத்தனை சக்திகள் நிறைந்த எனது கணவன் விஷாகனின் தாக்குதலில் பட்டுப்போன மரமென உடனே மண்ணில் சரிந்தான் அவனின் ஆத்மாவும் அழிந்து போனது.என் கணவர் சக்திகளை இழந்து சாதாரண மானுடனாகவே இருந்தார் ஆதலால் ஒற்றை வாள்வீச்சில் அவரை சரித்துவிட்டான் என் மகன் எனில் நீலகாந்தன் அப்படி இல்லை .உலகின் தலை சிறந்த அகோரிகளிடம் சிறு வயத்திலிருந்தே அதர்வண வேதங்களையும் ,சூனியங்களையும் ,மாந்திரீகத்தையும் கற்று தேர்ந்து வந்தவன் அவன் .ஆதலாலேயே அவனது சக்தியில் முக்கால் பாகம் விரயமானாலும் அவனது எஞ்சி இருக்கும் சக்தியை வைத்து தெய்வ அம்சமாகிய ஆருத்ராவையே சரித்துவிட்டான்.

ஆதிரா(முடிவுற்றது)Where stories live. Discover now