அவளோ அவன் கூறிய செய்தியில் கைகளில் நடுக்கம் பரவ உதடு துடிக்க அவனையே வெறித்தபடி நின்றாள் அதிர்ச்சி அவளை சிலை ஆகி இருந்தது . "எ........ என்....... என்ன ...........இ.... இளவரசியா ந...... நா........ நானா எ......... எப்படி என....... எனக்கு ஏதும் புரியலையே அப்....... அப்போ பாப்ஸ்..... மீ......."என்க
அவனோ சற்று தன்னையே ஆசுவாசப்படுத்திக்கொண்டவன் அவள் இரு தோள்களிலும் கை போட்டு "ஆரா relaxda நா சொல்லப்போறது எல்லாமே உனக்கு ரொம்ப ரொம்ப shockingaaஹ் இருக்கும் அத விட நீ இதை எப்படி நம்புறதுனும் யோசிக்கலாம் பட் நா சொல்றது எல்லாமே உண்மை "எங்க
அவளோ "என்னங்க சொல்றீங்க நீங்க எனக்கு ஒண்ணுமே புரியல என்ன நடந்துச்சுனு தயவு செஞ்சு விளக்கமா சொல்லுங்களேன் ப்ளீஸ் "என்க
அவன் ஏதோ கூற வர அவர்கள் தலைக்கு மேல் அங்கிருந்து பறவை கூட்டம் திடீரென சிதறி பறப்பதை உணர்ந்தவன் சுற்றி முற்றி பார்க்க ஏதோ தவறு நடக்கப்போவதாய் உள்ளுணர்வு உந்த "ஆரா இப்போ என்னால எதையும் உனக்கு விளக்கமா சொல்ல முடியாது அது உனக்கு பாதுகாப்பு இல்ல நாளைக்கு வரைக்கும் மட்டும் பொறுத்துக்கோ ப்ளீஸ் நா எல்லாத்தையும் தெளிவா சொல்றேன் .இப்போ என்கூட வா"என்று அவள் கையை பற்ற
அவளோ அவன் கையை தட்டிவிட்டவள் " உண்மை என்னனு தெருஞ்சுக்காம நா இங்க இருந்து வரதா இல்ல ஆதேஷ் "என்று பிடிவாதமாய் அங்கேயே நிற்க அவனோ பாடகற்றதுடன் சுற்றி முற்றி தன் கண்பார்வையை சுழல விட்டவன் மேலே நிலவை பார்க்க அதிலோ கொஞ்சம் கொஞ்சமாய் இருள் மறைக்க துவங்கி இருந்தது .
அதை கண்ட பின்பே இன்றைய நாளை நினைவு கூர்ந்தவன் தன் தலையில் கை வைத்து "ஓஹ் ஷிட் .என்றவன் அவள் புறம் திரும்பி ஆரா சொன்னா கேளு இங்க இருக்குறது safe இல்ல .இன்னைக்கு சந்திரகிரஹணம் ஸ்டார்ட் ஆயிருச்சு சொன்னா கேளு என்னோட வா "என்க
அவள் மீண்டும் மீண்டும் அவன் கரங்களை உதற அவள் பின்னே எதையோ கண்டவன் திடீரென கண்கள் விரிய ஆரா என்று கத்தியவன் அவளை பிடித்து வேறுப்புறம் தள்ளி விட அங்கே தரையில் இரண்டடி தள்ளி விழுந்தவள் சுதாரித்து திரும்பிய நிமிடம் ஆதேஷின் கையை ஒரு கூறிய அம்பு பதம் பார்த்திருக்க அவன் கரத்திலிருந்து ரத்தம் ஆறாய் வழிந்துகொண்டிருந்தது .