வினோதினி வெளியேறியதும் அவள் பின்னால் செல்லாது நாற்காலியில் சிலையாய் பிடிவாத்தத்துடன் அமர்ந்திருந்தான் ராஜ். அவனின் கோபம் தீரவில்லை என அவன் எண்ணிக்கொண்டாலும் அவனின் புண்பட்ட ஆண்மைக்காக தான் அவன் பிடிவாதமாய் நாற்காலியில் அமர்ந்திருந்தான். வாக்மேனை கிப்ட் டப்பாவில் வைத்தபோது புண்ணில் உப்பைத் தேய்த்தது போல் உறைத்தது. "வாக்மேன் வாங்கும் அளவுக்கு சம்பளம் வாங்குறேன்னு குத்திகாட்டுறாளா" என அவனின் மூளை வினோதினியின் அன்பை திசைத் திருப்பியது. ஆனாலும் வெகு நேரம் யாருமில்லா அறையில் தனியாய் உட்கார்ந்திருப்பது சலிப்பைத் தர ராஜ் எழுந்து மீண்டும் மணவரைக்கு வந்து தன் நண்பர்களைக் கண்டுக்கொண்டான்.
நண்பர்களைக் கண்டதும் கிண்டல் கேலி பேச்சுடன் அவர்களுடன் ஒட்டிக்கொண்டான். திருமண வைபோகத்தின் சிரிப்பும் குதூகலமும் அவனின் கோபத்தையும் வினோதினியையும் மறக்க செய்தது. சில மணி நேரம் கழித்து நண்பர்களிடம் விடைப்பெற்றுக்கொண்டு மீண்டும் ரயில் ஸ்டேஷனக்கு புறப்பட்டான் ராஜ். கோயம்புத்தூர் ரயில்வே ஸ்டேஷன் அதிகாலையில் அவனை வரவேற்றது போல் இப்போதும் அதே கூட்ட நெரிசலுடன் வரவேற்றது. சென்னைக்கு ஒரு டிக்கட் வாங்கிக்கொண்டு ஒரு தண்ணி பாட்டில் வாங்க ஸ்டேஷனில் இருந்த ஒரே ஒரு பொட்டிக்கடையின் முன்னால் வந்து நின்றான். தண்ணி வாங்கி விட்டு திரும்புகையில் கடைக்கு பக்கத்தில் இருந்த பென்ச் இல் வினோதினி அமர்ந்திருந்ததைக் கண்டு திடுகிட்டான்.
அவளைப் பெயர் சொல்லி கூப்பிட்டதும் கூட்டத்தை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவள் திரும்பினாள். அவளின் கண்கள் சிவந்திருந்தன. காலையில் தெரிந்த பொழிவு நேரத்தினாலோ சோகத்தினாலோ இம்மாலையில் மங்கியிருந்தது.
"எனக்காக இங்க உட்கார்ந்து இருக்கியா? மண்டபத்துலேர்ந்து வீட்டுக்கு போகலையா?" என அவளருகில் வந்தான் ராஜ். அவள் வெகு நேரம் தனக்காக ஸ்டேஷனில் அமர்ந்திருந்தாளோ என எண்ணுகையில் அவனின் மனதில் கொஞ்சம் குற்ற உணர்ச்சி எழுந்தது.
ŞİMDİ OKUDUĞUN
அழகியல்
Romantizm" எவ்ளோ கஷ்டப்பட்டு நீ தான் வேணும்னு வீட்ல சண்ட போட்டு இப்போ engagement ல வந்து நிக்கிரோம். இப்போ வந்து பிரிஞ்சிடலாம் nu சொல்ற. இந்த 9 வருஷத்துக்கு பதில் சொல்லு ராஜ்!" வினோதினி அவனின் சட்டைக் காளரைப் பிடித்து அழுதாள். அழுதவள் அவனின் தோளிலே சாய்ந்தா...