ஆனந்த பைரவி 23💖

396 20 4
                                    

அந்த இருட்டு அறையில் அமர வைக்க பட்டு இருந்தார் அமர்...

டேய்..யாருடா நீங்க??என்னை எதுக்கு டா பிடிச்சுட்டு வந்தீங்க???என அவர் கத்திய கத்தல் அந்த சுவற்றை தாண்டி வெளியே செல்ல வாய்ப்பில்லை...

கதவு திறக்கும் சத்தம் கேட்க...சத்தம் வந்த திசையை நோக்க அறையில் வெளிச்சம் பரவியது...வந்தது செல்வம்...

நீயா??
என்னை எதுக்கு கடத்தி வச்சிருக்க??

உன் வேலை முடிஞ்சுது...இனி நீ எனக்கு தேவை இல்லனு தோணுச்சு... அதான் பாட்னர்...என செல்வம் சிரிக்க...

நான் கெட்டது செஞ்சாலும் எனக்கு நல்லது மட்டுமே செஞ்ச அந்த மனுஷனை கொலை செய்ய வச்சுட்டேல???உன்னை சும்மா விட மாட்டேன்..என அமர் கத்த...

செல்வம் எகத்தாளமாக சிரித்தார்....டேய்..அங்க என் வேலை முடிஞ்சதும் சொல்றேன் இவனையும் முடிச்சுடுங்க..என கூறி விட்டு சென்றான்...

அமருக்கு ஏற்கனவே தன்னை நினைத்தே வெறுப்பாக இருந்தது...தான் செய்தது எல்லாம் மகளுக்கு தெரிந்தால்???என்ன ஆகும் என் யோசிக்க கூட முடியவில்லை....

மருத்துவமனையில் சதா கைது செய்ய பட்டு அழைத்து செல்ல ..தனா வந்து அழ துவங்கினார்...என் புள்ளை மேல நிச்சயம் எந்த தப்பும் இருக்காது அவனை விட சொல்லு பைரவி..என அழ..

கையாலாகாத நிலையில் இருந்தாள் பைரவி...எதை வைத்து அவனை விட சொல்ல முடியும்..??அதற்குள் டிவிக்களில் விவாத நிகழ்ச்சிகள் வேறு....முன்னால் முதல்வரை மகனே கொன்று உள்ளார் .இதற்கும் நமது இந்நாள் முதல்வர் பைரவிக்கும் தொடர்பு இருக்குமா???

நம்ம முதலமைச்சர் புருஷன் என்பதால் வெளிய எடுக்க தான் பார்ப்பாங்க...

சதா இருக்குற இடம் தெரியாம இருப்பாரு...அவரு இதை செஞ்சாருனு நம்பவே முடியல....

ஆளாளுக்கு பேச...செல்வம் ஒரு புறம் தன் ஆட்களை கட்சிக்குள் தூண்டி விட்டார்..பைரவி ராஜினாமா செய்ய வேண்டும்....நீதியாக இந்த கேஸ் விசாரிக்க பட வேண்டும்....என ...

ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு Where stories live. Discover now