1.இன்ப சுற்றுலா

2.8K 114 42
                                    

" டேய் ஒழுங்கா சாப்பிடணும்.. ஆத்துல தண்ணீ நிறையா இருக்கும். உனக்கும் நீச்சல் தெரியாது.. அதுனால தண்ணீல இறங்குனனு தெரிஞ்சுது கொன்றுவேன் " என்றபடியே அவனது ஆடைகளை பையில் எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள் மீரா.

ராமும் அதற்கு தலை ஆட்டிக் கொண்டிருந்தான்.. " மீரா அவ ஒன்னும் சின்னப் பையன் இல்ல.. வளர்ந்துட்டான். அவன அவன் லைப என்ஜாய் பண்ணவிடு.. என்ன சரி தான ராம் " என்று கிருஷ் சொன்னதும்  மீராவின் முகம் மாறியது.

" அக்கா இப்ப எதுக்கு ப்பீல் பண்ற.. மாமா சொன்னா சொல்லிட்டுப் போறாங்க.. நான் எப்பவும் உன் தம்பி தான்கா " என அவளை சமாதானப்படுத்தினான்..

" மாமா நான் தான் சொன்னேன்ல இவங்க ரெண்டு பேர்கிட்டயும் பேசறது வேஸ்ட்.. சும்மா எப்ப பாரு  பாசமலர் படம் ஓட்டிக்கிட்டு . முடியலடா சாமி..அநியாயத்துக்கு சீன் போடறாங்க. உன்னை எல்லாம் எப்படிதான் யுபிஎஸ்சி செலக்ட் பண்ணாங்களோ" என நிலா காலை வார,
" ஹேய் என்ன எம்பொண்டாட்டிக்கு என்ன குறைச்சல்.. அவ திறமைக்கு பிரைம் மினிஸ்டரே ஆகலாம் அப்படிதான மீரா" என கிருஷ் மீராவிடம் சேம் சைடு கோல் போட முயல, அதை அறிந்த மீராவோ " ரெண்டு பேரும் அமைதியா இருக்கிங்களா..ராம் மறுபடியும் சொல்றேன்.. மோசமான பசங்களோட சேராத.. தெரியாதவங்க எது கொடுத்தாலும் வாங்காதா.. நைட் எங்கயும் வெளிய போகாத.. " என்று அடுக்கிக் கொண்டே போக,

" மீரா இன்னும் சொல்லு.. பாவம் இந்தப் பையன எந்தப் பொண்ணாச்சும் கடத்திட்டுப் போயிறப்போறாங்க.. பார்த்து ராம் எதாவதுனா கத்தி ஊரக் கூட்டிடு சரியா " என நிலா மீண்டும் இருவரையும் கிண்டல் பண்ண ஆரம்பித்தாள்..

இதைக் கேட்டதும் கிருஷ் விழுந்து விழுந்து சிரிக்க, அவனுக்கு தலையணை அடி ஒன்று பரிசாக கிடைத்தது.. இருந்தும் அவன் வாய் பொறுக்க முடியாமல் " மீரா சொல்றனு தப்பா நினைக்காத.. அவன் இங்க இருக்குற தேனிக்குத் தான் பிரண்ட்ஷோட மூனு நாள் டூர் போறான்.. இத்தனை நாள் தனியா ஹாஸ்டல்ல அவன் தனியாதான இருந்தான்.. அவன் பார்த்துக்குவான்மா.. " என்றான்..

காதலால் கைது செய்Where stories live. Discover now