கோவிலுக்குச் சென்ற மொத்தகுடும்பமும் மீராவின் நிலையறிந்து திரும்பி வந்துவிட்டனர்.
தனுவின் கண்களிலிருந்து கண்ணீர் வடிந்துகொண்டே இருந்தது.. அவளை சமாதனப்படுத்த யாரும் முன்வரவில்லை.ஒருபுறம் இத்தனை ஆண்டுகளாக உயிருக்குயிராய் காதலித்தவன் மறுபுறம் தனது மொத்தக்குடும்பம் என யாரும் தனக்கு துணையாக இல்லை..
அவள் முதன்முறையாக தனது தாயின் பாசத்திற்காக ஏங்கினாள்.
ரேவதி மற்றவர்களுக்கு எப்படியோ ஆனால் தனுவின் விசயத்தில் எந்தக்குறையும் வைத்ததில்லை.. அவரது தோள்சாய்ந்து அழவேண்டும் போல தோன்றியது." நிலா நீங்களாச்சும் அவர்கிட்ட சொல்லுங்க.. தனு தெரியாம பண்ணிட்டாங்க.. அவங்க இவர விரும்புனாங்கனு சொல்லியிருந்தா நானே விட்டுக் கொடுத்திருப்பேன். என்னைவிட தனுதான் இவங்களுக்கு சரியான ஜோடி..இதுக்காக போலிசெலாம் கூப்டுகிட்டு. " என ஜானகி கூற, கண்களில் கொலைவெறியுடன் ஜானகியைப் பார்த்தான்.
அவள் பேசப்பேச அவன் கோபமாக அவளை நெருங்க, வார்த்தைகள் வெளியே வராமல் தந்தியடித்தன..அவள் பயந்து பின்னோக்கி நகர அவனோ அடுத்த அடியிலே அவளது கழுத்தினை அழுந்தப்பற்றி மேலேத் தூக்கினான்.. அவள் மூச்சுவிட சிரமப்பட ஆகாஷும் ஆனந்தும் அவனைத் தள்ளிவிட்டு இருகைகளையும் பிடித்துக் கொள்ள, கீதாவும் கவிதாவும் ஜானகியை எழுப்பிவிட்டனர்..
" உன்னைக் கொல்லாம விடமாட்டேன்.. " என ஆத்திரத்தில் பொங்க
" ராம் உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு.. அவ எவ்ளோ உன்னை விரும்பிருந்தா அப்படி சொல்லியிருப்பா.. பொம்பளைப்புள்ளைய கைநீட்ற அளவுக்கு வந்துட்டியா " என கீதா அவனை கன்னத்தில் அரைய,
அவனோ அடுத்த நொடியே அவர்களது கைகளைப் பற்றியபடியே தரையில் மண்டியிட்டு அழுக ஆரம்பித்தான்." நான் ஒரு முட்டாள்மா.. என்னால தான் அக்காவுக்கு இப்படியாகிடுச்சு.. " என தேம்ப ஆரம்பித்தான்.. அவனின் தலையை ஆதரவாக தடவியவர் " மீரா நல்லா இருக்காடா.. இன்னும் கொஞ்ச நேரத்தில வீட்டுக்கே வந்துடுவா " என்றவர் " ஆனா அதுக்கு ஜானுவ என்னடா பண்ணுவா.. பாவம் " என்க
YOU ARE READING
காதலால் கைது செய்
Romanceஒருபுறம் உயிருக்குயிராய் உருகும் ஒருத்தி.. மறுபுறம் வெளியுலகம் அறியா அபலைப் பெண் இரண்டிற்கும் நடுவே தடுமாறும் இளைஞனின் கதை.. முள்ளும் மலரும் கதையின் தொடர்ச்சி..