15..

1.4K 94 341
                                    

" அக்கா நான் இப்போ என்னதான் பண்றது.. எனக்கு காதல் வசனமெலாம் பேசி பழக்கமே இல்ல..
அவ வேற நான் அவகூட டைம் ஸ்பென்ட் பண்ணிலைனு கோபமா இருக்கு.. இவளையே சமாளிக்க முடியல.. இதுல அவங்க அம்மாவ நான் எப்படிக்கா மாத்துவேன் " என அங்கும் இங்கும் குறுக்கும் நெடுக்கமாக நடந்துகொண்டே கேட்க,

கிருஷும் நிலாவும் தலையலடித்துக்கொண்டனர்

" ராம் இதுலாம் நீயே யோசிச்சு பண்ணனும்டா.. அவளுக்கு நீ எது பண்ணாலும் பிடிக்கும் .. கல்யாணத்துக்கு முன்னாடியே அவள எங்களோட பேச வெச்சிட்ட போதும் வேற எதும் நீ பண்ண வேண்டா.. " என மீரா கூற, தனுவினை சந்திக்க முடிவெடுத்தான் ராம்..

என்னதான் தன்காதலை சொல்லி திருமணத்திற்கே சம்மதம் வாங்கியிருந்தாலும் மற்ற பெண்களிடம் பேசுவது போல தைரியமாக தனுவிடம் பேச ராமிற்கு வெட்கம் பிடுங்கித்தின்றது.. மிகவும் சாதாரணமாக அனைவரிடமும் சொல்லி விட்டு தனுவை வெளியே அழைத்து வந்துவிட்டான்.. ஆனால் என்ன பேசுவது எங்கு கூட்டி செல்வது என எதுவும் தோன்றவில்லை அவனுக்கு..

அவளுக்கு பிடிக்கும் என்கிற காரணத்தால் நன்றாக அடிக்கும் ஆரஞ்சு நிறத்தில் சட்டையணிந்து அவன் வர அது அவனது நிறத்திற்கு சற்று பொருந்தவில்லை எனினும் அவனுக்காக சகித்துக் கொண்டாள்.. இந்நேரம் வேறயாராக இருந்தாலும் ' இதப் பார்த்து நாலு மாடு செத்து போச்சு.. ஆறு ஆடு செத்து போச்சு.. என்ன டிரெஸ்ஸுடா இது ' என உண்மையை உலறியிருப்பாள்..இருப்பினும் தனக்காக அவன் மாற விரும்புகிறான் என்ற எண்ணமே அவளுக்கு சந்தோசத்தைத் தந்தது..

தனு இவர்களது முதல் பைக் பயணம் என்பதால்
ஆகாயத்தில் பறந்துகொண்டிருந்தாள்.
அவனது மனநிலை தெரிந்திருந்தாளாவது இந்நேரம் தலையில் நறுக்கென்று கொட்டி சகஜநிலைக்கு கொண்டுவந்திருப்பாள்.. அவனும் அந்த மாலில் நிறுத்துவான்..இந்த திரையரங்கில் நிறுத்துவான்.. இல்லையா கோவிலிலாவது கண்டிப்பாக நிறுத்துவான் என எதிர்பார்த்தவளுக்கு பொறுமை காற்றில் பறக்கத் துவங்கியது..

காதலால் கைது செய்Where stories live. Discover now