2. சதுரகிரி

2.1K 99 57
                                    

தேனி மாவட்டத்தில் மயிலாடுதுறை பஞ்சாயத்திற்கு உட்பட்டதுதான் அரண்மனைப் புதூர் என்கிற குக்கிராமம்.. அனைத்து வகையான மக்களும் அமைதியாக ஒற்றுமையுடன் வாழும் செழிப்பான கிராமம்..

அந்த ஊர் பஞ்சாயத்து தலைவரிடம் அனுமதிப் பெற்று அங்குள்ள வயல்களுக்கு சென்று ஆய்வுகளை மேற்கொண்ட பின்னர் அங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்கும் புத்துணர்ச்சியுடன் சென்று வந்தனர் ராம் மற்றும் அவனது நண்பர்கள்.. அவர்கள் சென்ற நேரம் மழைக்காலம் என்பதால் ஆற்றிலும் நீர்வரத்து அதிகமாகத் தான் இருந்தது..
அதிகாலையில் எழுந்த ராம் ஆற்றில் செந்நிற சூரியக்கதிர்கள் நீரில்பட்டு  தெறிக்கும் காட்சியை தனது புகைப்படக்கருவியில் பதிவாக்கிக் கொண்டிருந்தான்..

அவன் காதுகளில் மெல்லிய கொலுசொலி கேட்க, சுற்றுப்புறத்தை ஆராயத் துவங்கினான்.. அங்கே  கையில் குடத்துடன் பாவாடை தாவணியில் ஒரு இளம்பெண் நடந்து வந்து கொண்டிருந்தாள்.. அவளது முகத்தைப் பார்த்ததும் மனதுக்குள் அவளைத தான் எங்கோ சந்தித்தது போன்ற உணர்வு தோன்றியது. சூரியஒளியில் அவள்முகம் பிரகாசித்தாலும் அவளது கண்கள் ஒருவித சோக மொழியை வீசியது.. அவளது சோகம் அவனையும் ஏனோத் தாக்கியது..

கிருஷ் அடிக்கடி மீராவினை முதல்முறை பார்த்தபோது தனக்குத் தோன்றிய உணர்வினை ராமிடம் கூறியதுண்டு.. தற்போது அதே உணர்வினை அவனும் உணர்வதைப் போல உணர்ந்தான்.. இருந்தும் ஒரு பெண்ணினை அவளறியாமல் இப்படி எண்ண கூடாது என அவனது மனம் எச்சரிக்க தனது எண்ணத்தை தவிர்த்துவிட்டு நண்பர்கள் உறங்கும் குடிலுக்குள் புகுந்து கொண்டான்..

காலை உணவை முடித்தபிறகு சதுரகிரி மலைக்கு சென்று வரலாம் என நினைத்தவர்கள் அதற்கான ஏற்பாட்டைக் கவனிக்க ராமோ அந்த மதிமுகம் தந்த மயக்கத்திலே இருந்தான்.. அவளது கண்கள் அவனுக்கு பல வருடங்களாக பரிட்சயம்
ஆனது போன்று இருந்தது.. ஆனால் எவ்விதம் என்றுதான் தெரியவில்லை..
எதற்கும் கிருஷிடம் இதைப்பற்றிக் கூறி விடலாமா என யோசித்தான்..ஆனால் கிருஷ் எங்கே மீராவிடம் சொல்லி விடுவானோ என்கிற பயத்தில் அமைதி ஆனான்.. இந்த ஊரைவிட்டு செல்வதற்குள் அந்தப் பெண்ணைப் பற்றி அறிந்துகொண்டு அவளுக்கும் சம்மதம் என்றால் அக்காவிடம் சொல்லி பெண் கேட்க வரவேண்டும் என்கிறவரை யோசித்துவிட்டான்.

காதலால் கைது செய்Where stories live. Discover now