16.

1.2K 80 80
                                    

சிவானியின் வீட்டிலிருந்து வந்த ராமிற்கு மேற்கொண்டு என்ன செய்வதென்றே தெரியவில்லை.. தனது வீட்டில் மீராவினை பழி வாங்குவதாக இருந்தால் யாராக இருக்கும் என யோசித்தால் அது அவர்களுக்கு செய்யும் பெரிய பாவமாக தோன்றியது.. சிவானியும் பொய் சொல்வதாகத் தெரியவில்லை

எண்ணெயை கீழே கொட்டி சினிமாத் தனமாக பழி வாங்க நினைத்தது யார் என யோசிக்கும் போது திடீரென மனதில் மின்னல் வெட்ட அவனது அலைபேசியில் தான் கடைசியாக பதிவு செய்த காணொளியை எடுத்துப் பார்த்தான்..

அதில் தனுவும் அக்சுவும் ஜானகியை பழி வாங்க, இரவு 
ஜானகியின் தட்டில் யாருக்கும் தெரியாமல் காரத்தினை சேர்க்க
திட்டம் போட்டதை பார்க்கவும்,
ஒருவேளை தனுதான் சிவானியை பழி வாங்க செய்திருப்பாளோ என ஒரு நொடி நினைத்தவன் ' அவள் மீராவை தள்ளிவிட நினைக்கவில்லை என்றுதான் கூறினாளே தவிர ஜானகியை பழி வாங்க நினைக்கவில்லை என அவள் கூறவே இல்லையே என தோன்றியது..
ஏற்கனவே அவளை மொத்தக் குடும்பமும் சந்தேகப்பட்ட வேதனையிலிருந்தே அவள் இன்னும் வெளிவரவில்லை. தானும் அவளை சந்தேகப்படுகிறேன் எனத் தெரிந்தால் மனம் வெறுத்துவிடுவாள் என நினைத்து அவளிடம் இதைப் பற்றி கேட்க நினைத்தவன் அந்த எண்ணத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தான்.

அவனிற்கு தற்போது சிவானியின்மீது மீரா அக்காவிற்கு கெடுதல் செய்ய நினைத்ததிற்கான கோபம் குறைந்திருந்த பட்சத்தில் தனுவும் அக்சுவும் ஜானகியை கஷ்டப்படுத்த வேண்டுமென்றே சமையலில் வேண்டாத பொருளைக் கலப்பது, அவள் துவைத்து வைத்த துணிகளை கசக்கி கீழே போட்டது என அப்போது செய்த சிறுசிறு விளையாட்டுத் தனங்கள் அப்போது சிறியதாக தெரிந்தாலும்
இப்போது அவனுக்கு பெரியதாக தோன்றியது..

நேராக வீட்டிற்கு சென்றவன் அக்சுவைத் தனதறைக்கு தூக்கிச் சென்று பொறுமையாக பேச ஆரம்பித்தான்..

" அக்சு.. நான் உங்கிட்ட ஒன்னு கேட்கனும்.. அதுக்கு குட் கேர்ளா பதில் சொல்வியா பேபி.. "

காதலால் கைது செய்Where stories live. Discover now