18..

1.7K 86 90
                                    

மரகதபுரம்.. முழுக் கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் நகர பழக்க வழக்கங்களை தங்களுக்குள் திணித்துக் கொண்டிருக்கும் ஒரு குக்கிராமம்..

இங்கு தனுவின் அன்னை ரேவதியின் ஒன்று விட்ட அண்ணன் பாஸ்கரன் வீட்டிற்குத்தான் தனு வந்திருக்கிறாள்.
வசதியில் குறைந்து சற்று பட்டிக்காட்டானாய் இருக்கும்  பாஸ்கரனை ரேவதிக்கு என்றும் பிடிக்காது.. அதனால் தான் தனுவின் திருமணத்திற்கு கூட அழைக்கவில்லை..

பாஸ்கரன் லதா தம்பதியினர் கயல்விழி என்ற ஒரு மகளும் ரஞ்சித் என்ற மகனும் பெற்று ஏழ்மையிலும் சந்தோசமாக வாழ்ந்து வருகின்றனர்.. தனுவுக்கு இவர்களை மிகவும் பிடிக்கும்.. வருடத்திற்கு ஒரு முறையாவது இங்கே வந்து விடுவாள்..

இன்றும் வந்திருக்கிறாள் தான் தொலைத்த மனநிம்மதியைத் தேடி.. அது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்...

💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟💟

நாட்கள் அதன்பாட்டில் நகர அதை விரும்பாத ராமோ தனதறைக்குள்ளே முடங்கிக்கிடந்தான்..

என்ன தான் தனுவினைப் பற்றி நன்றாக புரிந்திருந்தாலும் அன்று அவனிருந்த மன நிலையில் எதிர் முனையில் தனு பேசியது தனது மூளையை மழுங்கச் செய்தது.. ஆத்திரத்தில் அவன் செய்த முடிவு அவன் வாழ்வை திசை திருப்பியது..
அவன் செய்த தவறுக்கு ஈவு இரக்கமின்றி தண்டனையை அனுபவிக்கிறான்.

என்ன தான் ராம் தவறு செய்திருந்தாலும் அவனது இழப்பு பேரிழப்பே.. அவளுடன் கழித்த இனிமையான நினைவுகள் அவனை இன்னும் கொடுமை படுத்தின.. அன்னம் ஆகாரம் எதுவும் வேண்டாமல் தன்னையே வறுத்த ஆரம்பித்தான்..
தான் செய்தது எவ்வளவு தூரம் பாதித்திருந்தால் உயிருக்குயிராக காதலித்த தன்னையே வேண்டாமென்று ஒதுக்கி தள்ளியிருப்பாள்..
அங்கு அவள் எப்படி இருக்காளோ..
எதேனும் தவறான முடிவை எடுத்து விட்டாளோ என்ற நினைப்பே உயிர் வரை சென்று வலித்தது.

அவன் அவ்வாறு இருக்க
மீராவுக்கோ ராமைத் தான் சரியாக கவனிக்கவில்லையோ என கவலை கொண்டாள்.. இருப்பினும் தனு தங்களை விட்டு சென்றது ராமின் மீதான கோபத்தை அதிகப்படுத்தியது.. அதனாலே ராமிடம் பேசுவதை நிறுத்திக் கொண்டாள்.. கீதாவும் நிலாவுமே அவனுடன் பேசுவதில்லை..

காதலால் கைது செய்Where stories live. Discover now