6. வன்மம்

1.5K 83 153
                                    

தனது சிறு தலைவலிக்கு கூட பதறும் தனது மீராக்கா இன்று மயிரிழையில் உயிர்தப்பி வந்த தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் சென்றது உயிர்வரை சென்று வலித்தது.. தான் எடுத்த முடிவு சரிதானா எனத் தனக்குள் கேட்டுக் கொண்டான் ராம்.

அமைதியாக படுக்கையில் படுத்தவன் காதில் மெல்லிய கொலுசொலி கேட்டது.. ஆனால் இந்தமுறை வித்தியாசமாக கேட்டது..

எழுந்து அமர்ந்தவன் தனது அருகே அமர்ந்திருந்த தனுவைப் பார்த்ததும் உடனே எழுந்து விட்டான்..
" தனு இங்க என்ன பண்றீங்க. " என அவன் பதறவும், அவனை முறைத்தவள் " ஓ சார் இப்ப மட்டும் தனுனு சொல்வீங்க.. போன்ல தனுசுயாவா.." என்க,

" நான் சொல்றத புரிஞ்சுக்கோங்க தனு.. வெளிய போங்க.. யாராச்சும் பார்த்தா தப்பாயிடும் " என அவன் கெஞ்ச,

" யாரோவா உங்க ஜானகியா.. " என்றதும்
யாராவது வருகிறார்களா என்று பார்த்தவன் " ப்ளீஷ் தனு சொல்றத புரிஞ்சுக்கோங்க.. நானே உங்ககிட்ட வந்து சாரி கேட்கனும்னு நினைச்சிருந்தேன். " என்றதும்
தான் நினைத்ததை தான் சொல்லப் போகிறான் என்பதை உணர்ந்தவள் எங்கே ஜானகியை நேரடியாகவே விரும்புவதாக சொல்லிவிடுவானோ எனப் பயந்து

"  ஐ லவ் யூ ராம்.. நீ இல்லாத வாழ்க்கைய என்னால நினைச்சுக்கோட பார்க்கமுடியாது.
இத்தனை நாள் நான் உன்பின்னாடி சுத்தியும் ஒருநாள் உன்னை தொல்லை பண்ணிருக்கேனா.. உன்னோட சந்தோசம்தான் எனக்கும் முக்கியம்னு தான இவ்ளோ நாள் இருந்தேன்.. ப்ளீஸ் என் காதல அக்செப்ட் பண்ணிக்கோ
நீ இல்லைனா நான் செத்திடுவேன். என்னை ஏமாத்திராத.. நான் சும்மா சொல்லல ராம்.. உண்மையாவே செத்ருவேன் " என ஒரே மூச்சுடன் சொல்லிவிட்டு அவன் கூப்பிடுவது காதில் கேட்டும் நில்லாமல் ஓடிவிட்டாள்.

ராமிற்கு அவளுக்கு எப்படி புரியவைப்பது எனத் தெரியவில்லை.. அவள் சென்றதும் நிலா உள்ளே வர இவளும் திட்டத்தான் போகிறாள் என நினைத்தவன் திரும்பி நிற்க
அவளோ அருகில் இருந்த களிம்பை எடுத்து இரத்தம் கசிந்து கொண்டிருக்கும் கைவிரலில் பூசிவிட்டு எதுவும் பேசாமல் சென்றுவிட்டாள்.
ராம் விரைவில் கிருஷ் மற்றும் மீராவிடம் ஜானகியைப் பற்றிய உண்மையையும் தன் காதலையும் தெரியப்படுத்தி தனுவிடம் புரிய வைக்க வேண்டும் என நினைத்துக் கொண்டான்.

காதலால் கைது செய்Where stories live. Discover now