11. ராமின் செயல்

1.6K 90 46
                                    

மீரா சந்தோசத்தில் நிலாவுக்கு ராமின் காதலைத் தெரிவித்து விட, நிலாவோ அதற்கு ஒருபடி மேலே சென்று தனுவுக்கே அலைபேசியில் சொல்லிவிட்டாள்..

தனுவிற்கும் அவன்மீது கோபம்
இருந்தாலும் வீட்டிற்கு வந்தால் தனது தாய் ரேவதி அவனை அவமானப் படுத்தி விடுவார்களோ என பயந்தாள்.. அவன் என்ன செய்வானோ என பயத்தில் அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாள்..

வீட்டின் காலிங் பெல் அடிக்கவும் மாடியிலிருந்து கீழே வந்தாள். அவனை ரேவதி பார்க்குமுன்பே தோட்டத்திற்கு அழைத்து சென்றாள்..

தைரியமாக அவனை அழைத்து வந்திருந்தாலும்
அவன் கண்களை பார்க்க அவளுக்கு தைரியம் இல்லை என்பதே உண்மை..
ஆனாலும் பேசியே ஆக வேண்டும் என்ற காரணத்தால்
" எங்க வீட்டுக்கு நீ எதுக்கு வந்தனு தெரியும் ராம்.. ப்ளீஷ் என்னைத் தொல்லைப் பண்ணாம போயிடு.. என்னால இனிமே பொறுமையா இருக்க முடியாது.. " என அவள் கோபமாக கூறவும்,

" தனுசுயா.. நான் என்ன சொல்ல வரனு கேளுங்க " என்று மரியாதையாக அவன் பேசவும் ' இவனெலாம் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் திருந்தவே மாட்டான்' என நினைத்தவள் அவளும் அதையே பாணியைக் கையிலெடுத்தாள்.

" மன்னிச்சுக்கோங்க மிஸ்டர். ராமச்சந்திரன்.. உங்களோட புலம்பல கேட்க எனக்கு டைம் இல்லைங்க "

அவளும் வேற்றார்போல தனது முழுப்பெயரை சொல்லும் போது தான் தான் எவ்வளவுதூரம் அவளைக் காயப்படுத்துகிறோம் என்பதை உணர்ந்தான்.. அதை சரிசெய்யும் பொருட்டு
" என் காதல சொன்னாலும் இப்படித்தான் பேசுவியா தனு" என்றான்.

ஒருநொடி அதிர்ந்தாலும் " ஒ உங்க பின்னாடி இத்தனை வருசம் நாய் மாறி சுத்துனனால நாய்க்கு பிஸ்கட்ட தூக்கிப் போடறமாறி உங்க காதல போடறீங்களா. அப்படிப்பட்ட காதல் எனக்குத் தேவையில்லை.. உங்களுக்கு பார்த்த உடனே பிடிச்சமாறி
ரொம்ப அழகான ஒரு டாக்டர் காத்துகி்ட்டு இருக்கும்போது எங்கிட்ட ஏன் வரீங்க " என்றாள் நக்கலாக

காதலால் கைது செய்Where stories live. Discover now