5. மீராவின் கோபம்

1.5K 82 31
                                    

இரண்டு தினங்களுக்கு பிறகு,
" கிருஷ் அவ பிரண்ட்ஸாவது போன அட்டென்ட் பண்ணாங்களா.. நான் அப்பவே சொன்னேன் அவன் அங்க போக வேணாம்னு.. கேட்டாதான.. அந்த ஏரியா கமிஷ்னருக்கு கால் பண்ணலாம்னாலும் வேணாம்ங்ற.. " என மீரா புலம்ப,

" ஏய் மலைல சிக்னல் கிடைச்சிருக்காது.. அதுனால கூட இன்பார்ம் பண்ணாம இருக்கலாம்ல.. ரிலாக்ஸ இரு.. நான் பாத்துக்குறேன் " என கிருஷ் அவளுக்கு ஆறுதல் சொன்னாலும் அவனுக்கும் பயம் இருக்கத்தான் செய்தது.. இதுவரை ராம் சொன்ன நாளில் வராமல் இருந்ததோ அல்லது மீராவிடம் பேசாமல் இருந்ததோ இல்லை.

அனைவரும் அவனுக்கு எதுவும் ஆகாமல் பத்திரமாக வர வேண்டும் என வேண்டிக் கொண்டிருந்த நேரம் வாசலில் கார் வந்து நின்றது.. மீரா உட்பட பயந்தபடியே வெளியே வந்து பார்த்தனர்.
முதலில் தீனாவும் சக்தியும் தயங்கியபடியே இறங்க..அடுத்து தலையில் பெரிய கட்டுடனும் கையிலும் காலிலும் சிறு பேன்டெய்டுகளுடனும் ராம் இறங்க அனைவரும் அதிர்ச்சியாகினர்..
அதைவிட பேரதிர்ச்சியாய் அந்தப் பெண்ணும் அவனது கையைத் தாங்கிப் பிடித்தவாரே இறங்க
அனைவரும் ஒரு நிமிடம் ஆடித்தான் போயினர்..

அதிர்ச்சியில் இருந்த மீண்ட கிருஷ் ராமையும் மற்றவர்களையும் உள்ளே அழைத்தான்..
உள்ளேவரத் தயங்கியவளின் கைகளை அழுந்தப் பற்றி வா என்று சைகை செய்ய அவளும் பயந்தவாரே உள்ளே வந்தாள்.
தனுவிற்கு கண்ணீர் சிறிதுநேரத்தில் கொட்டி விடுவேனா என்ற நிலையில் இருக்க அதை வெளியே விடாமல் இருக்கிப் பிடித்துக் கொண்டிருந்தாள்..

கீதாவும் ராஜனும் அவனது காயத்தைப் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்க தனுவும் நிலாவும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றனர்.

மீரா தீனாவை நோக்கி " இப்பவாச்சு என்ன நடந்துச்சுனு சொல்வீங்களா இல்ல அப்டியே அமைதியாகிடுவீங்களா " என மிரட்ட தீனாவுக்கும் சக்திக்கும் வார்த்தை வர மறுத்தது.. ராம் அவ்வளவுதூரம் தைரியம் சொல்லிக் கூட்டி வந்தாலும் மீராவின் கோபத்தால் அனைத்தும் தவிடுபொடி ஆனது..

காதலால் கைது செய்Where stories live. Discover now