அவன் காதலை ஏற்றுக் கொள்ளாத போதே அவனை மறக்க முடியாமல் தவித்த அவளது மனம் அவனே தனது காதலை வழிய வந்து கூறும்போது அதை தவிர்க்கவா தோன்றும்..அவனிடம் வீர வசனம் பேசிவிட்டு வந்தாலும் அவனை நோகடித்து விட்டோமே என தவித்துக் கொண்டிருந்தது. எங்கே அவன் மீண்டும் தன்னிடம் வந்து பேசமாட்டானா என எண்ணி தவித்தது..
அந்த நேரம்தான் ரேவதி அவளிடம் புடவையைக் கொடுத்து தயாராகி கீழே வரச் சொன்னார்.. இந்த திடீர் நிகழ்வை அவளால் நம்பக் கூட முடியவில்லை.. வெறும் பேச்சுக்கு திருமணத்திற்கு சம்மதித்தாலும் அவனைத் தவிர வேறொரு ஆடவனை தனதருகே நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.. அதை நினைக்கும் போது அவளுக்கே அறுவெறுப்பாக இருந்தது..
"தனு உன்னை விட்டா எனக்குனு யாரு இருக்கா.. உனக்கு ஒரு கலியாணத்த பண்ணிப்பார்த்தா தான் என்னோட ஆத்மா கூட சாந்தியடையும்..நாங்க போனப்பிறகு இந்த உலகத்துல உனக்காக யாருமே இல்லைனு அழக்கூடாதுடி.. " என்று நேற்று இரவு ரேவதி அழுதது நினைவு வந்தது..
சரி மாப்பிள்ளையிடமாவது பேசிப் பார்க்கலாம் என கிளம்பி கீழே வந்தாள்..
அவள் கீழே இறங்கியதும் " தனு நாம ஜெயிச்சிட்டோம் " என்றபடி அக்சு அவள் கால்களைக் கட்டிக் கொண்டாள்.. அதிர்ச்சியில் சுற்றியும் பார்க்க, கிருஷ் மற்றும் அவனது பெற்றோர், ராம், சக்தி , நிலா மற்றும் ஆதி என அனைவரும் அமர்ந்திருந்தனர்.. மீரா மட்டும் இல்லை..
நிலா சந்தோசமாக வந்து அவளது தலையில் பூச்சரத்தை சூட்டினாள்.. " கடைசில எப்படியோ அந்தக் கருவாயன மடக்கிட்ட " என்று காதுக்குள் கிசுகிசுத்தாள்..
தனுவிற்கு அழுகவும் முடியவில்லை.. சிரிக்கவும் முடியவில்லை.. ஓடிச்சென்று தனது தாயைக் கட்டிக் கொண்டாள்..
ராம் குனிந்த தலை நிமிராமல் இருப்பது தன்மீது உள்ள கோபத்திலா அல்லது வருத்தத்திலா என அவள் சந்தேகப்படத் துவங்க,ஆனால் அவளைப் பார்த்ததுமே போலிப் புன்னகை வீச அதை அவள் கண்டறிந்து
ராமிற்கு ஏதோ பிரச்சினை என்பதை மட்டும் சரியாக யூகித்தாள்.
YOU ARE READING
காதலால் கைது செய்
Romanceஒருபுறம் உயிருக்குயிராய் உருகும் ஒருத்தி.. மறுபுறம் வெளியுலகம் அறியா அபலைப் பெண் இரண்டிற்கும் நடுவே தடுமாறும் இளைஞனின் கதை.. முள்ளும் மலரும் கதையின் தொடர்ச்சி..