Hi watty..
உனக்கு நான் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல.. எங்கேயோ இருந்த எல்லாரோயும் வாட்பேட் என்ற ஒரு புள்ளியில் கோர்த்த உனக்கு நன்றி..பொழுதுபோக்கையும் தாண்டி உன்னதமான உணர்வுகளை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு நன்றி.
தனிமையை உறவாய்க் கொண்டவர்களுக்கு தற்போது உன்னால் அன்புக் குடும்பத்தையே உருவாக்கிக் கொடுத்த உன் பரந்து விரிந்த மனதிற்கும் நன்றி!
இவையனைைத்தயும் தாண்டி என்மேல் அள்ள முடியா அன்பு கொண்டிருக்கின்ற.. எந்த ஒரு சூழ்நிலையிலும் என்னை விட்டுக் கொடுக்காத..
எப்போதும் என் முட்டாள்த்தனத்தை சகித்துக் கொண்டு...
எனது தவறையும் வலிக்காமல் சுட்டிக்காட்டி..
சில சமயம் என்னிடம் திட்டு வாங்கி...
எப்போதும் என்னை இளவரசியாய் என்னை நானே நினைக்குமளவிற்கு
பெருமைப்படுத்தி..
எனக்காக நிறைய பேரிடம் சண்டைபோட்டு...
என்னை ஆண்டு முழுதும்
ரக்ஷாபந்தன் கொண்டாட வைக்கும் அளவிற்கு எனக்கு ஒரு அண்ணனை தந்த உமக்கு
கோடான கோடி நன்றிகள்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆசிக் அண்ணா உண்மையா எனக்கு என்ன சொல்றதென்று இப்ப வரைக்கும் தெரியல..நான் எதையும் எல்லார்கிட்டயும் பகிர்ந்து கொள்ளுமளவிற்கு ஓபன் மைன்ட் பர்சனும் கிடையாது.. கொஞ்சம் சிடுமூஞ்சியும் கூட.. ஆனா எப்படி என்னை உங்களுக்கு பிடிக்குதுனு எனக்கே தெரியல.. உங்க அன்புல நான் பாதியாவது வெச்சிருக்கனானும் தெரியல.. 🙏
நீங்க எனக்கு அண்ணனா கிடைச்சதுனால நான் ரொம்ப லக்கி.. என்னை உங்களமாறி யாரும் அவ்ளவோ ஸ்பெசலா ட்ரீட் பண்ணது கிடையாது. இதுக்கு கடவுளுக்கு நன்றி சொல்றதா..இல்ல வாட்பேட்க்கு நன்றி சொல்தான்னு தெரியல..
நீங்க எப்பவும் சந்தோசமா சிரிச்சிக்கிட்டே இருக்கனும்னு கடவுள்கி்ட்ட வேண்டிக்கிறேன்..எவ்ளோ பிரச்சனைக்குப் பிறகும் நான் வாட்டி வரது உங்களுக்காகவும் நம்ம பிரியாவுக்காக மட்டும்தான்..
எனக்கு சுட்டுப்போட்டாக்கூட கவிதை வராது.. அதுனால நீங்களே எதாவது எழுதிக்கோங்க.. இல்லைனா பிரியாக்கிட்ட கடன் வாங்கிக்கோங்க..இதுக்கு மேல உங்கள புகழ்ந்தா கண்ணு பட்ரும்.. இல்லைனா சளி பிடிச்சிரும்னு தெரியும்.. அதுனால இதோட நிறுத்திக்கிறேன்..
Happy rakshabandhan anna
📶📶📶📶📶📶📶📶📶📶📶📶📶📶📶