மொழி 8

7.1K 270 51
                                    

என்ன டாக்டரம்மா... செம்ம அழகா இருக்கிங்க.. என்றவாரே அவளது அருகில் வந்தான் அவளது தூரத்து உறவினரான குமார்..

போன திருவிழாவில் தான் பக்கத்து ஊர் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதால் ஜெயிலுக்குச் சென்றான்

Ops! Esta imagem não segue nossas diretrizes de conteúdo. Para continuar a publicação, tente removê-la ou carregar outra.

போன திருவிழாவில் தான் பக்கத்து ஊர் பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதால் ஜெயிலுக்குச் சென்றான்.. எப்படி வெளியே வந்தான் என்று தெரியவில்லை..

அவனைக் கவனியாது தனது தாயிடம் செல்ல நினைத்தவளைக் கைப்பற்றித் தடுத்தான்.. அவள் கையை அவனை அறைய ஓங்குவதற்கு முன்னரே அவனது கன்னத்தில் இடியென ஒரு அறை இறங்கியது..

" எத்தனை தடவை சொல்லிருக்கேன்..வீட்டுக்குள்ள வரக்கூடாதுனு.. வந்ததும் இல்லாம என் தங்கை கையவே பிடிக்கறியா " என்று மறுபடியும் அறைந்தான் ஆகாஷ்..

அதற்குள் பெரியவர்கள் வந்துவிட அவன் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டான்..
கமலா வந்த உடனேயே தலையில் உள்ள காயத்தைக் கண்டு கண்ணீர் வடித்தார்.. பெற்ற மனமாயிற்றே காயம் அவ்வளவு பெரிது இல்லையென்றாலும் வலிக்காமல் இருக்குமா..

" அம்மா.. நீங்க அழுதே அவளப் பயப்படுத்திடுவிங்க போல.. இது சும்மா ரெண்டு ரூபா பேன்ட்டெய்ட்.. அதுக்கு பல லட்சம் மதிப்புள்ள உங்க கண்ணீர வீணாக்காதிங்க " என்று கமலாவைத் தேற்றினான் ஆகாஷ்..

சந்துருவும் அனுவுமே கமலாவை ஆன்ட்டி என்றே தான் அழைப்பார்கள்.ஆனால் ஆகாஷ் மட்டுமே கமலாவை அம்மா என்று உரிமையோடு அழைப்பான்.. இந்த வீட்டிலே அனைவரையும் முகம் கோணாமல் நடத்துவது அவன் மட்டுமே.. சாதனாவிற்கு ஒரு அண்ணன் இல்லையே என்ற கவலையைக் குறைத்தவன் இவன் ஒருவனே..அனுவுக்கும் இவனென்றால் கொள்ளைப் பிரியம்..ஆனால் பிரசாந்திற்கும் இவனுக்கும் தான் ஏழாம்பொருத்தம்.. ஆகாஷிடம் இருக்கும் பொறுமை என்றுமே இவனிடம் இருக்காது.. சந்துருவிற்கும் அனு இவனுடன் நெருங்கிப் பழகுவதால் என்றுமே ஒரு கண்ணுக்குத் தெரியாத வெறுப்பு இருந்து கொண்டே இருக்கும்..

காதலின் மொழி (முடிவுற்றது)Onde histórias criam vida. Descubra agora