வீட்டிற்கு வந்த குகன் சோபவில் சாய்ந்து விட்டத்தை நோக்கி தலையை சாய்த்த வண்ணம் நடந்தவற்றைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தான் .....
மாமா என்ன மாமா School ல இருந்து நேரத்தோட வந்துட்ட என்ற சியாமலாவின் குரல் கேட்டு நினைவுக்கு வந்தான் .,
ஆஹ் என்ன கேட்ட .,
என்ன மாமா School ல இருந்து நேரத்தோட வந்துட்ட அப்டினு கேட்டன் (அப்போது சியாமலா 10th standard படிச்சிட்டு இருந்தா ) நா உனக்காக wait பண்ணிகிட்டு நின்ன எங்க போன உன் க்ளாஸ் பசங்க நீ வரலன்னு சொன்னங்க என அடுக்காக கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தாள்.,
அது வந்து accident ஆயிட்டு .,
என்ன மாமா சொல்றிங்க எப்ப என்ன ஆச்சு என பதட்டத்துடன் கேட்க.,
எனக்கில்லமா மாலினிக்கு.,
உன் க்ளாஸ் மெட் மாலினி அவங்களுக்கா.,
ஆமா ரோட் குரஸ்ஸாஹும் போது அடி பட்டுடுச்சு இப்ப பரவால பயப்புட்றத்துக்கு ஒன்னுமில்ல.
, ஓஹ் அப்டியா சரி நீங்க ஏன் டென்சனா இருக்கிங்க
அது வந்து Uv இருக்காதான .,
ஆமா அவங்களும் உங்க ப்ரன்டுதான அவங்களுக்கும் அடி பட்டுடுச்சா என கேட்கும் போதே வீட்டினுள் குகனின் மாமா சியமலாவின் தந்தை யாருக்கு அடி பட்டுச்சு என கேட்டுக் கொண்டே உள் நுழைந்தார் .,
அது வந்து மாமா என் க்ளாஸ் மெட் ப்ரன்ட் ஒன்னுக்கு சின்ன ஆக்சிடன்ட அதான் சொல்லிக்கிட்டு இருந்தன் என கூறினான் .,
மாமா - இப்ப எப்டி இருக்குப்பா .,
பரவால மாமா evening கூட்டி போய்டலாம்னு சொல்லிடாங்க .,
ஆஹ் சரிப்பா கவனமா பாத்து பைக் ஓட்டுங்க இப்ப இந்த மாதிதான் ஒரே எக்சிடன்ட் ஆகுது அம்மாடி ட்ரஸ் சேன்ஞ பண்ணிட்டு வந்து சாப்பாடு வை மா டைம் ஆயிடுச்சு வேலைக்கு போகனும்
என அவ்விடத்தை விட்டு அவரும் நகர்ந்து விட
குகன்... நல்ல வேல Uv பத்தி எதுவும் சியாமலாகிட்ட சொல்லல அவ சின்ன பொண்ணு மாமாகிட்டசொல்லிடான்னா என யோசித்தவாறே சாப்பிட சென்று விட்டான்.,
மறு நாள் மாலினியை சந்தித்து சமாதானம் செய்ய வேண்டும் எனவும் Uv யிடம் இதை பற்றி எதுவும் சொல்லி விடாதே எனவும் கூறி விட வேண்டும் Uv யிற்கு தெரிந்தால் நட்பிற்காக மாலினிக்கு சாதகமாகவும் எனக்கு பாதகமகவும் பேசக் கூடியவள்தான் இந்த விஷயத்தை பொறுத்தமட்டில் மாலினி என்னிடம் பேசியவற்றை தெரியாது பார்த்துக் கொள்ள வேண்டும் பின்பு பொறுமையாக நம் காதலை எடுத்துச் சொல்வோம் என எண்ணியவாறே உறங்கிப் போனான்
மறு நாள் பாடசாலையிற்கு மாலினி வரவில்லை
Uv, குகனிடம் தான் வந்த பிறகு நடந்தவற்றை கேட்டாள் அதற்கு குகன் .,
ஆஹ் அவ ஆசிரமத்து ஆட்கள் வந்து கூட்டிட்டு போய்டாங்க 2 days rest எடுக்க சொல்லிக்காங்க அதான் school வரல என்றான் .,
ஓஹ் அப்டியா அப்ப நாம எல்லாரும் evening போய் பார்த்துவிட்டு வருவோம் என கூற குகன் எவ்வளவோ தடுக்க முயற்சி செய்தும் பலனின்றி Uv மற்றும் ஏனய நண்பர்கள் அனைவரும் மாலினியை நலம் விசாரிக்க சென்றனர். குகனை கோபத்துடன் அடிக்கடி பார்த்த மலினி பெரிதாக யாருடனும் விருப்பத்துடன் பேசவில்லை எல்லோர் முன்பும் காதல் பற்றி பேச விரும்பாததால் அது குகனுக்கு சிறு ஆதரவாக இருந்தது இருந்தாலும் என்றாவது ஒரு நாள் தெரிந்து விடும் என்ற பயமும் இருந்து கொண்டுதான் இருந்தது.
ESTÁS LEYENDO
வினாவின் விளிம்பில் .(complete)
Fantasíaகாதலுக்கும் நட்பிற்கும் இடையிலான போராட்டம். வாழ்கையில் ஏற்படும் குழப்பங்களிற்கு தவறான புரிதலா? அல்லது எங்கோ ஏற்பட்ட தவறின் பிரதிபலனா ? விடை கிடைக்குமா என பார்ப்போம்