Part 29

780 29 5
                                    

பவித்ரன் ,மாலினி சிரித்து பேசிக்கொண்டு வருவதை பார்த்த மூவரும் தமக்குள் பேசிக் கொண்டனர் நம்ம ப்ளேன் வெர்க்கவுட் ஆகுது என மகிழ்ந்தனர்., அத்தனை நேரமும் சிரித்த முகத்துடன் இருந்த மாலினியின் முகம் கோபமாய் மாறியது குகனை பர்த்ததும் ., அதை புரிந்து கொண்ட குகன் வா Uv நாம போலாம் terror தேட போறாரு அப்ப நாம இல்லன்னா வச்சு அடவு கட்டுவாரு என அனைவரையும் அழைத்துக் கொண்டு சென்றான்., இவ்வாறே நாட்களும் ஓடியது இடை நடுவில் மாலினியின் சித்தி மலினியை தேடி கண்டு பிடித்துவிட்டார் ஊருக்கு போகலாம் அங்கே கல்வியை தொடரலாம் என அழைத்தார்.,

உனது அம்மா அப்பா இருவரையும் உன் தாத்தா பாட்டி ஏத்துக்க இல்ல ஆரம்பத்துல அப்றம் அவங்க ஏற்கும் போது அவங்க குடும்பத்தோட சேந்து வாழாமயே போய்டாங்க ஆனா அவங்க குழந்த நீ இருக்கானு சொன்னாங்க உனக்காக உன் அம்மா சொத்து அங்க இருக்கு நீ அங்க வந்ததும் உன்கிட்ட ஒப்படைச்சிட்றன். என கூறி முடித்தார்

தான் இத்தனை வருடங்களும் அனாதையாக வாழ்ந்து இப்போது உறவு கிடைத்தாலும் குகனை விட்டுச் செல்ல மனம் வரவில்லை அவன் மனது மறும் என எண்ணி பாடசாலை கல்வியை இங்கேயேமுடித்துவிட்டு வருவதாக கூறி சித்தியை அனுப்பி வைத்தாள் அவரும் சரியென ஊருக்கே திரும்பி விட்டார்

பாடசாலையில் இறுதியாண்டு நிகழ்ச்சிகள் நடை பெறவிருந்தது அதற்கென எல்லா மாணவர்களும் தயாராகிக் கொண்டிருந்தனர் குகனை பொறாமை கொள்ள வைக்க வேண்டும் என எண்ணி மாலினி பவித்ரனுடன் பாடல் பாட தயராகிக் கொண்டிருந்தாள் இதை கண்ட நண்பர் மூவரும் கண்களால் பேசிவிட்டு நகர்ந்தனர் பவித்ரனை தனியே சந்தித்து குகன் பேசினான், மச்சான் நா சொன்ன மாதி உனக்கு செஞ்சிட்டன் இப்போ happy யா.,

ஆமான்டா ரொம்ப thangs டா .,

மறுபுறம் உடை மாற்றும் அறையில் மதி., Uv பேசிக்கொண்டனர் நம்ம ப்ளேன் படி குகன் மாலினிக்கும் இடையில வெறுப்பு வர வச்சிட்டம் குகனுக்கும் இனி இத பத்தி யோசன இல்ல இனி அவன ஒரு வழிக்கு கொண்டு வந்தா சரி., என பேசிக் கொள்கையில் இதை கேட்டுவிட்ட மாலினி கோபம் கொந்தளிக்க துரோகி ஏன்டி இப்டி பண்ண நீயெல்லாம் ஒரு friend ஆ ச்சே உன்ன பாத்தாலே பிடிக்கலென வாய்க்கு வந்தபடி பேச மதி குறுக்கிட்டு புரிஞசுக்காம பேசுற .,

ஆமாடி இவளோ நாளா உங்கள புரிஞ்சுக்காம தான் இருந்திக்கன் நீயும் இதுக்கு துணை போயிருக்க என ஏசிவிட்டு சென்று விட்டாள்

பாடசாலை இறுதி நாள் வரை மாலினி யாருடனும் பேசவில்லை எவ்வளவு சமாதானம் கூற சென்றாலும் எதையும் காதில் வாங்கி கொள்ளவுமில்லை., இறுதியாக மதியும் Uv யும் அமர்நதிருக்கையில் மாலினி ஒரு முடிவுடன் வந்து பேசினாள் பழைய படி நண்பர்காளாகுவோம் ஆனால் குகன் பற்றி எந்த பேச்சும் பேசக் கூடாது எனவும் இருவரும் ஒப்புக் கொண்டு ஊருக்கு செல்ல மூவரம் புறப்படடனர் ஆனால் இவ்வளவு தூரம் இறங்கி பேசிய மாலினியின் மனதில் இருந்தது "என் காதலை கொச்சை படுத்தி பிரித்த உன்னை அதே போல் நீ உண்மையாக ஒருவனை நேசித்து அவன் உன்னை பிரிந்தால் எவ்வளவு வலிக்கும் என்பதை உணர வைக்க வேண்டும் அப்போதுதான் எனது மனது சமாதானம் ஆகும் அதற்கு இருவரும் ஒன்றாகவே இருக்க வேண்டும்" என திட்டம் தீட்டியே மீண்டும் இணைந்து கொண்டாள்.,

பேருந்து தரிப்பிடத்தில் குகன் Uv யை சந்தித்தான் நம்ம விஷயத்த மாமாக்கிட்ட பேசி சம்மதம் வாங்குவன் அப்ப உனக்கு ok தான என கேட்டான்.,

Uv மாலினியை பார்த்துவிட்டு இப்போது எதுவும் கூற முடியாமல் சரி அத அப்றம் பார்க்கலாம் என கூறினாள்.,

பஸ் வந்ததும் மாலினி ஏறு என மதி கூற இனி அந்த பேர சொல்லி கூப்டாத எனக்கு தேவையில்லாத நிறைய நினைவுகள் வரும் என கூறிவிட்டு ஊரை நோக்கி மூவரும் புறப்பட்டனர்.

(ஆரம்பத்தில் கீதன் என குறிப்பிட்டவர்தான் குகன் இன்னொரு பெயர் அதை கூற மறந்துவிட்டேன் குழப்பத்திற்கு வருந்துகிறேன்.,)

வினாவின் விளிம்பில் .(complete)حيث تعيش القصص. اكتشف الآن