உன்னோடு சந்தோசவானில் பறந்து இன்று சிறகொடிந்து கிடக்கிறேன் நீ இன்றி..
நெருப்போடு வேகிறேன் உன் நினைவுகளோடு
அணைக்க நீ இன்றி...
பூக்களாய் என் மீது மோதி இன்று பூகம்பத்தை போல் அடித்து சாய்த்துவிட்டாய்...
எனை வெறுத்த இதயத்தையே துரத்தி வருகிறது என் இதயம் கண்ணீரோடு...
அழகான நம் அன்பின் நேசம் மட்டுமின்றி எண்ணையும் மறந்து போகிறாயே...
என் இதயம் வடிக்கும் கண்ணீர்குள்ளும் நீயே நீந்தி செல்கிறாய்...
நினைவாயினும் கனவாயினும் உன்னைத்தவிர
யாருக்கும் இடமில்லையே இனி...
கல்லறையிலும் கண்ணாடி மாளிகை அமைப்பேனே நீ சுகமாக எனக்குள்
கலங்காமல் இருக்க......
இது வெறும் கவிதையின் வரிகள் அல்ல என் உயிரின் வலி மரணத்தை எதிர்நோக்கி.....
YOU ARE READING
மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ???
Poetryமனதின் வலிகளும் சொல்லமுடியா ஏக்கங்களும் மனதின் சிதறல்களும் பிறர் அறியாத கண்ணீர்களும்.....