உயிரின் வலி

103 18 24
                                    

கண்ணீர் துளிர்த்து விட்டது
உள் வாங்கிக்கொண்டேன்..

என் கண்ணீரில் உன் நினைவு
கரைந்து விடக்கூடாதென...

துளியும் சிந்தமாட்டேன்
மரணம் வரை நீ வேண்டும்..

நினைவோடு அல்ல
நித்தமும் உன் அன்போடு..

வார்த்தை சிதைத்து விட்டது
மாய்த்துக்கொள்ள மாட்டேன்..

என் உரிமை இன்று பறிக்க
பட்டுவிட்டது என சொல்கிறாய்...

இன்றும் நம்புகிறேன் உன்
கோபம் மொழிகளில் என்மீது
கொண்டுள்ள அன்பை
உணர்கிறேன்....

சத்தியம் செய்து சாகடித்து
விட்டாய் உயிர் துடிதுடிக்கிறது

இது மாயவலியின் ஓசை அல்ல
உனக்காய் உருகிய உயிரின் வலி...

மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ??? Where stories live. Discover now