இரவில் ஒருநாள் அசதியில் தூங்கினாலும் மறுநாள் விடியலில்
ஆயிரம் கவியோடு சமாதானம் செய்திடுவேன்..சிலநாட்களாய் நீ விழித்து கொண்டே என்னுடன் பேசாமல் கடக்கிறாய் நள்ளிரவிலும் எதிர்பார்க்கிறேன் உன் குறுந்செய்திக்காக..
தனித்து இவ்வுலகிற்கு வந்தேன் தனிமையில் இனிமை காண்வேன் என வேதாந்தம் பாடினேன் உன் வருகை முடிந்த பின் தனிமையின் வெறுமை உணர்கிறேன்...
அன்பை முறிக்கும் கோபமெனும் வார்த்தையை ஏந்தி கொண்டு என்னை தீயாய் தாக்கி பொசுக்கி சென்றாயே...
கத்தியில் மட்டும் அல்ல உன் வார்த்தையிலும் உயிர் நோக கிழிக்க முடியும் என உணர்த்தி சென்றாயே..
YOU ARE READING
மனதை கொள்ளாமல் கொல்லும் மாயவலி இதுவோ???
Poetryமனதின் வலிகளும் சொல்லமுடியா ஏக்கங்களும் மனதின் சிதறல்களும் பிறர் அறியாத கண்ணீர்களும்.....