பகுதி - 27

1.6K 82 19
                                    

கண்மணியின் குரலை கேட்டதும், அனைவரும் அசடு வழிய.. தினேஷ் உரையாடலை ஆரம்பித்தான்.

தினேஷ்,”ஹலோ… ஹே உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்.. கேள்வி பட்டியா? தங்கச்சிக்கு ஒரு வரன் வந்திருக்கு” என்று கூற

தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த ஸ்ருதிக்கு புரை ஏற,திலீப் அவள் தலையில் தட்டிக் கொடுத்தான்.

கண்மணி, “ஆமா.. இப்போ தான் வீட்ல பேசிட்டு இருந்தாங்க… பையன் யாரு? ஸ்ருதிக்கு பிடிச்சிருக்கா? எல்லாம் விசாரிச்சீங்களா?” என்று அவள் அக்கறையாய்க் கேட்க.. ஸ்ருதியும் திலீப் புறம் ஒருவரை ஒருவர் மென்னகையுடன் பார்த்துக் கொண்டனர்.

தினேஷ், “அதெல்லாம் ஓகே தான் விசாரிச்ச வரைக்கும்…. ஸ்ருதி நேரில் பேசி தான் இனிமே ஃபர்தரா முடிவெடுக்கணும்… சோ… நம்ம கல்யாணம் சீக்கிரம் பண்ணணும் அப்படின்னு வீட்ல யோசிக்கிறாங்க…. நீ என்ன சொல்ற” என்று கேட்டான்.

இவ்வளவு நேரம் ஸ்பீக்கர் போனில் பேசிக் கொண்டிருந்தவன் எல்லோர் முகத்தையும் ஒரு முறை பார்த்தான். அனைவரும் ஸ்வாரஸ்யம் மாறாமல் இந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருப்பதை உணர்ந்து, ஸ்பீக்கரை ஆஃப் செய்து காதில் வைத்ததும் தான் நால்வருக்கும் அவன் செய்ததன் அர்த்தம் விளங்கியது.

அசடு வழிந்தபடி நால்வரும் நெளிந்தனர். தினேஷ் உரையாடலைக் தொடர்ந்தான்…

கண்மணி, “எனக்கு ஒன்றுமில்லை… நீங்க தான் கொஞ்சம் டைம் வேணும்ன்னு சொன்னீங்க.. உங்களுக்கு ஓகே தானா?” என்று பதில் கேள்வி கேட்க

தினேஷ், “நாலு மாசம்ன்னாலும் நீதான்.. ஒரு வருஷம்ன்னாலும் நீதான்… அப்புறமென்ன… எனக்கு ஓகே” என்று புன்னகைத்த படி அவன் கூற
நால்வரும் ரகசியமாய் சிரித்துக் கொண்டனர்.

கண்மணி, “அய்யய்யோ… ரொம்ப சலிச்சிக்க வேணாம்.. அதான் உங்க அத்தை பொண்ணு ரெடியா இருக்கே… அப்புறமென்ன “ என்று அவனை கலாய்க்க

மனம் போல் மணம்Hikayelerin yaşadığı yer. Şimdi keşfedin