ஆயுதா 22

6 0 0
                                    

ஆதித்யாவின் பொறுமையை சோதித்த காரணத்தினால் அவள் நிறைய நேரங்களில் அவரிடம் இருந்து பல திட்டுகளையும் அதற்க்காக அசிங்கப்படவும் வேண்டியிருந்தது. இந்த சூழலில் அவள் ஒரு நாள் அவளது கல்லூரி நண்பன் அரவிந்தை சந்திக்க நேர்ந்தது எதிர்பாராத விதமாக. அதுவும் அவளது அலுவலக வாயிலில். அவளுக்கு அது சந்தேகத்தை தர வில்லை மாறாக ஆச்சர்யத்தை தந்து இருந்தது. டேய் அரவிந்த் எப்படி இங்க. நீ எங்கப்பா இங்க. நான் இங்க தாண்டா வேல பாக்கறேன். வீடு எங்கப்பா இருக்கு நீ எப்படி இருக்க. நான் நன்னாருக்கேண்டா. வீடு இங்கேந்து கொஞ்ச தூரம் போகணும். வண்டில போயிடுவேன். நான் உங்க வீட்டுக்கெல்லாம் வரக்கூடாதா. வாயேண்டா. நானே கூட்டிட்டு போறேன் என்று அவனை தனது இருசக்கர வானத்தில் ஏற்றிக்கொண்டு கிளம்பினாள்.

எந்த பெண்ணும் இன்னொரு ஆடவனை தன்னுடைய இருசக்கர வாகனத்தில் அமர அனுமதிக்க கூடாது அவன் நண்பனாக இருந்தாலும் சரி. இது அந்த ஆடவன் அவள் மீது நிறைய உரிமை எடுத்துக்கொள்ள வழி வகுக்கும் என்று அப்போது பாவம் அவளுக்கு தெரியவில்லை. அவளுக்கென்று இப்போது இருப்பது அந்த 2 குழந்தைகள் மட்டுமே. அவளுக்கு இப்போது இந்த வயதில் தேவை ஒரு ஆடவனின் துணை. ஆனால் அவன் எப்படி பட்டவன் எந்த ஸ்தானத்தில் அவளுக்கு வேண்டும் என்பதை முடிவு செய்து விட்டு அனுமதிக்க வேண்டும். ஆதித்யாவினுடன் அவளுடைய வேளையில் நிறைய நேரங்கள் ஆதித்யாவுடனேயே இருக்க வேண்டிய கட்டாயம் இருந்தது. இத்தனை மனிதர்களுக்கு இடையில் கண்ணியம் தவறாது பழகும் ஆதித்யா அவளை கொஞ்சம் அசைத்து தான் இருந்தார். ஆரம்பத்தில் இருந்து ஆதியாவின் கணீர் என்ற குரல் அவளுக்கு அவளுடைய ம்ரித்யுவை நிறைய நேரங்கள் நினைவு படுத்தி இருந்தது. இந்நிலையில் அவருடைய எல்லா நடவடிக்கைகளும் ம்ரித்யு வை நினைவு படுத்திக்கொண்டு இருந்தன. ம்ரித்யுவிற்கும் அடிக்கடி கோவம் வரும் முன்கோபி. ஆனால் நல்ல மனம். யாரும் கஷ்ட பட அனுமதிக்க மாட்டான். இவள் பாசியாய் இருந்தால் பொறுக்க அவனால் முடியாது. இது போன்ற பல. அதனால் கொஞ்சம் கொஞ்சமாக ஆயுதாவின் மனம் ஆதித்யாவிடம் சென்றது. இது காதல் அல்ல ஒரு மரியாதை கலந்த அன்பு என்றே ஆரம்பத்தில் இருந்தது. இரு சக்கர வாகனத்தில் இருவரும் பேசிக்கொண்டே ஆயுதாவின் வீட்டிற்கு வந்திருந்தனர். குழந்தைகள் பள்ளியில் இருந்து drawing class போயிருக்காங்க டா. நீ வீட்டுக்குள்ள இரு நான் போய் அவங்கள கூட்டிட்டு வரேன். அவள் வருவதற்குள் அவன் வீட்டின் கதவை திறந்து அவளுக்கும் அவனுக்கும் டீ போட்டுவிட்டு அமர்ந்தான். அவள் குழந்தைகளை அழைத்து வந்து உடை மாற்றி அவர்களை homework எழுத உக்கார்த்தி வைத்தாள். அம்மா இந்த uncle யாரு. உங்க அம்மா கூட காலேஜ் ல படிச்சேன்டா. உன் பேரு என்ன ? நான் யதுநந்தன் இவன் என்னோட தம்பி மதுசூதனன். ஓ என்ன படிக்கறீங்க நான் 1st standard இவன் UKG ஹ்ம். சரிடா நீங்க போய் வீட்டுப்பாடத்தை எழுதுங்க. என்ன ஆயுதா நீ என்ன பண்ற. ஏன் இப்படி இருக்க. அதெல்லாம் ஒண்ணுமில்லடா நல்லாயிருக்கேன். இப்போதான் இந்த வேலை கெடச்சுச்சு. இப்போ நாங்க 3 பேரும் ஓரளவுக்கு நல்ல life வாழ ஆரம்பிச்சுட்டோம். ஏதேதோ பேசிக்கொண்டே இருந்தனர். நேரம் 8ஐ தொட்டது. அவன் கிளம்பிவிட்டான்.

ஆயுதா - ஒரு பெண்ணின் கதைTempat cerita menjadi hidup. Temukan sekarang