முடிவின் தொடக்கம் நீயே 💙 2

1K 18 0
                                    

அஜய் கேண்டினிலேயே நின்று கொண்டு கயலை பார்த்துக் கொண்டிருக்க மதன் கடுப்பாகி அவனை இழுத்து கொண்டு வகுப்பறைக்கு சென்றான்....

நீ காலையிலிருந்து சரியில்லை அந்த பொண்ண நீ முதல் முறை பார்க்கிற மாதிரி தெரியலையே ?? ஏதாவது விஷயம் இருக்காடா... அந்த பொண்ண காதலிக்கிறேன் மட்டும் சொல்லாதே.... எனக்கு நெஞ்சுவலியே வந்துரும் என்று அவன் பயப்பட்டபடியே கேட்க....

அஜய் வெட்கப்பட்டு கொண்டே ஆமாண்டா அவளை நான் லவ் பண்றேன் என்றான்....

மதன் கண்களை சுருக்கி அவளை இதுக்கு முன்னாடி நீ எங்கையோ பாத்திருக்க சரியா என்று கேட்க...

தன் நண்பனை மெச்சியபடி பார்த்தவன்... சரியா சொன்ன டா... நான் அவளை ஒன்றரை வருஷத்துக்கு முன்னாடி பாத்தேன்டா ...அதுவும் கோயில்ல என்று அஜய் வானத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னான்....

அங்கையா என் மூஞ்சி இருக்கு ...கருமம் புடிச்சவனே இங்க பாத்து சொல்லுடா ...நீ தான் கோவில் போக மாட்டியே அப்புறம் எப்படி கோவில்ல அவளை பார்த்த என்று கேட்டான்..

அம்மாவ கோயில் அண்ணா டிராப் பண்ண போன இடத்தில பிக்கப் ஆகிட்டு என்று சிரித்தான் அஜய் ...

இந்த கொடுமை எல்லாம் பார்க்க வேண்டியது இருக்கு ...மேல சொல்லு என்று மதன் கேட்க...

அம்மாவ டிராப் பண்ணிட்டு காரை எடுத்தேன் ..பின்னாடி கிச்சு கிச்சு ஒரு குரல் என்னவென்று திரும்பி பார்த்தா பச்சை கலர் பட்டு பாவாடை போட்டுக்கிட்டு ரெண்டு ஜடைய பிடிச்சுக்கிட்டே தலை நிறைய பூ வச்சிகிட்டு ஒரு குட்டி குழந்தைகிட்ட பேசிகிட்டு இருந்தாடா அவ என்று அவன் அந்த நாளை நினைத்து பார்த்தான்....

கோவிலுக்கு வந்த கயல்விழி சாமி தரிசனம் முடித்துவிட்டு வாசலுக்கு வர அங்கு ஒரு குழந்தை அழுதப்படியே நின்று கொண்டிருந்தது ...அதனிடம் விசாரிக்க அவன் தனது பெற்றவர் இறந்து விட்டதாகவும் அதிலிருந்து இந்த கோயில் வாசலில் தான் ஒரு மாதமாக இருக்கிறதாக கூறினான் ...

முடிவின் தொடக்கம் நீயே 💙 Where stories live. Discover now