முடிவின் தொடக்கம் நீயே 💙 14

353 10 0
                                    

அஜய் கூறியதை கேட்ட கயல்விழியின் முகம் வெட்கத்தில் சிவந்து போனது.. இருந்தாலும் அதை மறைத்துக் கொண்டு அமைதியாக அவன் வகுப்பை கவனிக்க அமர்ந்து விட்டாள் ... அவனும் நல்ல பிள்ளையாக மற்றதை மறந்து அவர்களுக்கு பாடத்தை சொல்லிக் கொடுக்க.. கயல் மட்டும் சில நேரம் அவன் பார்வையை சந்திக்க முடியாமல் திணறினால் .. அதை அஜய் கவனித்தும் கவனிக்காதது போல் இருந்தது கொண்டான் ...

படிக்குதுங்களோ இல்லையோ நல்லா ரொமான்ஸ் பண்ணுங்க என்று மனதில் நினைத்துக் கொண்ட மதன் .... சிங்கிள் சாபம் உங்களை சும்மா விடாது டா என்று புலம்பினான் ... அன்றைய வகுப்புகள் முடிந்ததும் அனைவரும் கிளம்ப கயல் ஒரு நிமிஷம் என்று அழைத்த அஜய் ஏதோ பேச வாய் திறந்தவன் பின் யோசனையுடனே இல்ல வேணாம் நீ வீட்டுக்கு போ நான் அப்புறமா போன்ல கூப்பிடுறேன் என்று விட்டான் ... அவளும் சரி என்று எனது நண்பர்களுடன் வெளியே நடந்தால்...

பாலாஜி தான் உலகே மாயம் பொண்ணுங்களே சாபம் என்று பாடல் பாடிக்கொண்டே... என் மனசுல இந்த பாட்டு தான் டா இப்போ ஓடுச்சு ... இவள எல்லாம் பிரண்டா வெச்சு இந்த பாட்ட தான் நம்ம கடைசி வரைக்கும் போட்டுட்டு இருக்கணும் போல என்று அவன் கூறியதும் ... நானே இப்பத்தான் அவர கொஞ்சம் ஏத்துக்கலாம்னு நினைக்கிறேன் என்று அவர்களிடம் கூறியவள்... என்னடி நீங்களும் இதே தான் சொல்ல போறீங்களா என்று கேட்க ...

அதெல்லாம் இல்ல எங்களுக்கு அவரை பிடிச்சிருக்கு... நீங்க ரெண்டு பேரும் சேர்ந்தா முதல்ல சந்தோஷப்பட்டுறது நாங்களா தான் இருப்போம் .. சீக்கிரம் அவருக்கு ஓகே சொல்லு மனுஷன் பாவம் என்று அவர்கள் கூற ... நாங்க மட்டும் அவளை பிரிக்கவா பாக்குறேம் என்ற ரீதியில் அவர்கள் பார்க்க.... நால்வரிடமும் என்ன பத்தி நீங்க ஏன் தப்பா நினைக்க போறிங்க...

கொஞ்ச நாள் போகட்டும் அவரு முடிவில மாறாம இருக்காராரு பாக்கணும் என்றால் சிரித்துக் கொண்டே கயல்... அவன் மாற மாட்டான் என்ற நம்பிக்கையில் கூறினாள்.. ஆனால் அவள் முடிவில் உறுதியாக இருந்தால்... கண்டிப்பாக இப்பொழுது தனது காதலை வெளிப்படுத்தக் கூடாது என்பதில்... ஆனால் கடவுள் வேறு முடிவை யோசித்து வைத்திருந்தார் போல..

முடிவின் தொடக்கம் நீயே 💙 Onde histórias criam vida. Descubra agora