அஜையிடம் பேசி வந்த பின் கயல் மிகுந்த வேதனையில் ஆழ்ந்தால்... ஏனோ அஜயை மறுக்க மனம் இல்லை அதே சமயம் ஏற்கவும் மனம் வரவில்லை... தலையைப் பிடித்துக் கொண்டு மேஜையில் படுத்துவிட்டாள் ...கண்ணீர் மட்டும் நிக்காமல் வழிந்தது ...அவளது நண்பர்கள் நால்வரும் எப்படி அவளுக்கு ஆறுதல் கூறி சமாதானம் செய்வது என்று தெரியாமல் விழித்தனர் ...
அஜய் நல்லவன் தான் ஆனால் ஒருவரை கட்டாயப்படுத்தி காதலை மனதிற்கு திணிக்க முடியாது என்று உணர்ந்தவர்கள் அமைதியாக இருந்தனர்...அவனை பொறுத்தவரை தன் காதலை அவளிடம் கூறும் முறை தெரியாமல் தனது முரட்டு சுபாவத்தினால் தனக்கு தெரிந்த வகையில் கூறிவிட்டான்... ஆனால் மென்மையான குணம் படைத்த கயல் இதனை ஏற்க முடியாமல் மனதோடு புலம்பி தவித்தாள்...
தன் மேல் அவனுக்கு ஈர்ப்பு இருப்பதை உணர்ந்திருந்தாள் ஆனால் அது இவ்வளவு இருக்கும் என்று அறியாமல் போய்விட்டாள் விளையாட்டு பிள்ளையாய்... மதன் தன் நண்பன் அஜையின் பக்கம் பாவம் பார்த்தாலும் கயல் போல் ஒரு இலகிய மனம் கொண்ட மிருதுவான சுபாவம் உடையவள் தனது நண்பனுக்கு எப்படி ஏற்றவர்களாக இருப்பாள் என்று முதல்முறையாக யோசிக்க தொடங்கினான்...
இதில் கயல் படுத்து கொண்டு இருந்த பக்கத்து மேஜையில் உள்ள இருவர் அவர்கள் வகுப்பு தோழியின் காதல் பற்றி பேசிக் கொண்டிருந்தனர் ....மகா உனக்கு தெரியுமா சிந்து ஒரு பையனை ரொம்ப காதலிச்சா இல்ல என்று பக்கத்தில் இருந்த தோழி மஞ்சுவிடம் கேட்க... ஆமா ரெண்டு பேரும் அப்படி பேசிப்பாங்களே அவங்க சொந்தக்காரன் பையன் தானே அது என்று பிரபா கேட்க ... அது சிந்து ஓட மாமா தானே அவ லவ் பண்ற பையன் என்று லாவண்யாவும் கேட்க...
இல்லடி நான் கூட அதான் நினைச்சேன்... ஆனா அப்படி இல்லை.. ஸ்கூல்ல படிக்கும் போது தெரிந்த பையன்... அவளோட சீனியர் போல... அப்போ இருந்து லவ் பண்ண ஆரம்பிச்சு மாமான்னு கூப்பிட்டு பழகி இருக்கா .. இப்ப அதுல என்னடி பிரச்சனை என்று லாவண்யா கேட்க.. அதெல்லாம் பிரச்சனையே இல்ல டி ... இப்போ சிந்து ஓட வீட்ல மாப்பிள்ளை பாக்குறாங்க என்று மகா கூறியதும்... பாலாஜி தைரியமாக போய் அந்த பொண்ணு அவங்க வீட்ல சொல்ல சொல்லு ... இல்லை அந்த பையனை வந்து பேச சொல்லலாம்ல சிந்து ...
ВЫ ЧИТАЕТЕ
முடிவின் தொடக்கம் நீயே 💙
Любовные романыஎன் ஒவ்வொறு முடிவின் தொடக்கமாக நீ வேண்டும் கண்ணம்மா 💖... It's a toxic love between Ajay krishna and kayal vizhi 💓