அஜய் நினைவில் அன்றைய நாள் இரவு தூக்கத்தை தொலைத்த கயல் அடுத்த நாள் தாமதமாகவே எழுந்து வந்தாள்.. திருமணத்திற்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது என்று அனைவரும் பரபரப்பாக வேலை செய்து கொண்டிருந்தனர்.. கௌதம் தினேஷ் இருவரும் சென்னை கிளம்பி சென்று விட்டனர்.. திருமணத்திற்கு இரண்டு நாள் முன்னால் லீவு எடுத்து வந்து விடுவதாக கூறிவிட்டு சென்றனர் ... வரவழைக்க பட்ட புன்னகையுடன் அந்த இடத்தை மகிழ்ச்சி படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தாள் கயல்...
மோகன் கீதா இருவரும் சேர்ந்து தங்களுக்கு இருக்கும் கொஞ்சமான சொந்தங்களுக்கு பத்திரிக்கை வைத்துவிட்டு கயலின் நண்பர்களுக்கு பத்திரிகை கொடுக்க கூறினார்கள் ... அவள் சரி என்று வாங்கி வைத்துக் கொண்டாலும் யாருக்கும் கொடுக்க மனம் வரவில்லை ... ஆனால் அவளை புரிந்து கொண்ட கௌதம் தினேஷ் இருவரும் மதன் வினோத் பாலா பிரபா லாவண்யா அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் பத்திரிக்கை வைத்து அழைத்து விட்டார்கள்... இருந்தும் தங்கள் தோழி அழைக்கவில்லையே என்ற மன வருத்தம் நால்வருக்கும் இருந்தது ...
நாட்கள் வேகமாக நகர்ந்து திருமண நாளும் வந்துவிட்டது .. கௌதமின் பேச்சை ஏற்று மதன் முதல் நாள் நிச்சய விழாவிற்கு வந்திருந்தான் ... தனியாக வருவதற்கு சங்கடமாக இருந்தால் பிரபா லாவண்யா வினோத் பாலா அவர்களுடன் சேர்ந்து வந்து விட்டான்... வந்ததும் வாசலில் பார்த்தது கயலை தான்... காலேஜ் படிக்கும் போது பார்த்த கயலுக்கும் இப்பொழுது இருக்கும் கயலுக்கும் பத்து வித்தியாசம் கண்டுபிடித்து விடலாம் ... அவ்வளவு மாறுபட்டு இருந்தால் ...
கன்னத்திற்கு கீழ் உள்ள கருவளையத்தை மறைக்க மேக்கப் போட்டு மிகவும் மெலிந்து போய் காணப்பட்டாள் ... அவளது குண்டு கன்னங்கள் பள்ளம் விழுந்து இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போயிருந்தது... மதன் அவளை பார்த்து வருத்தப்பட்டாலும் எதுவும் அவளிடம் பேசாமல் வந்து விட்டான் ... பாலா வினோத் இருவரும் அவள் கோலம் கண்டு திட்டினர் ... "இப்படி இருந்தா என்ன ஆகிறது கயல் ... ஒழுங்கா சாப்பிடுறியா இல்லையா "என்று அவளை இழுத்துச் சென்று அவர்கள் இருவர் கையாலே உணவு ஊட்டி விட்டனர் ...
BẠN ĐANG ĐỌC
முடிவின் தொடக்கம் நீயே 💙
Lãng mạnஎன் ஒவ்வொறு முடிவின் தொடக்கமாக நீ வேண்டும் கண்ணம்மா 💖... It's a toxic love between Ajay krishna and kayal vizhi 💓