முடிவின் தொடக்கம் நீயே 💙 35

392 13 4
                                    

அஜய் படுத்திய பாட்டால் இரவெல்லாம் தூங்காமல் இருந்த கயல் தன்னை மறந்து ஷோபாவில் தூங்க ஆரம்பித்து விட்டாள்.. அஜய் கண் விழித்தபோது அருகில் கயல் இல்லாமல் போக இப்படி அவள் தான் கூறியதை மீறி தன்னை விட்டு செல்லலாம் என்று வெறி பிடித்தவன் போல் தலையைப் பிடித்துக் கொண்டு கத்த ஆரம்பித்தான்.. மூளை யோசிக்க விடாமல் செயல் இழந்தது .. கயல் தன்னை விட்டு போவதற்கு யார் காரணம் .. எப்படி இவள் தன்னை விட்டு செல்லலாம் .. எங்கே சென்று தேடுவது என்று பலவாறு யோசித்தவன் தலை பலமாக வலிக்க மீண்டும் தலை முடியை பிடித்துக் கொண்டு கத்த ஆரம்பித்தான்..

அந்த சத்தம் கீழே வரை எதிரொலிக்க கிச்சனில் இருந்த பூர்வி கௌரி இருவரும் பயந்து படி வெளியே ஓடி வந்தனர் .. வீட்டில் வேலை செய்யும் அத்தனை பேரும் ஹாலில் வந்து அஜய் அறையை கலவரத்துடன் பார்க்க ... கயலும் பதறி கொண்டு எழுந்தால் ... வேலைக்காரர்கள் பயத்துடன் கீழே நின்றனர் ... மூன்று பெண்களும் பதறி அடித்துக் கொண்டு மேலே ஓடினார்கள்... மெத்தையில் குனிந்தபடி தலையை பிடித்தவாறு கண்கள் சிவந்து அஜய் அமர்ந்திருக்க பயத்தில் கிலி பிடித்து கயலுக்கு ...

உடை கூட அணியாமல் போர்வையை இடுப்பு வரை போட்டு அமர்ந்திருந்தான் ... அவன்‌ நிலை பார்த்து அழ கூட தெம்பில்லாமல் "அக்கா .. அத்தை நீங்க ரெண்டு பேரும் கொஞ்சம் வெளியே இருங்க" என்று கூறிய கயல் அறைக்குள் சென்றாள் ... அவர்களும் பாவமாய் அவளை பார்த்து விட்டு நாசுக்காக கதவை சாத்திவிட்டு சென்றுவிட்டனர் .. நெருங்கவே பயமாய் உணர்ந்தவள் எட்ட நின்ற படி " எ... என்னங்க ஆச்சு ..‌ஏன்‌ கத்துனிங்க "என்று கயல் கேட்டது தான் தாமதம்...

இத்தனை நேரம் குனிந்து இருந்தவன் சட்டென அவளை நிமிர்ந்து பார்த்தான்.. இறையை வேட்டையாடும் சிங்கம் போல் கண்கள் சிவந்து முகம் இறுகி கழுத்து நரம்பெல்லாம் புடைக்க அவளை பார்த்தான்... அவன்‌ பார்வையில் குப்பென்று உடல் வேர்த்தது.. பயத்தில் எச்சில் விழுங்கியவள் கால்கள் ஆணியடித்தது போல் அங்கே நின்றுவிட்டது..

முடிவின் தொடக்கம் நீயே 💙 Dove le storie prendono vita. Scoprilo ora