கயல் பேருந்தில் இருந்து இறங்கி சாலையை கடந்து காலேஜிற்குள் நுழையும் போதே மதன் கோபமாக பிரபாவிடம் பேசிக் கொண்டிருப்பதும் அதற்கு அழுகையுடன் அவள் நிற்பதை பார்த்து ஏதோ விபரீதம் என்று உணர்ந்து கொண்டு வேகமாக அவர்களிடம் சென்றால் .... இங்கே பாரு பிரபா முதலும் கடைசியுமா நான் சொல்றேன்... இதுக்கு உன்னால ஒத்துக்க முடியுமா முடியாதா என்று மதன் கோவமாக கேட்க ... பிரபா எப்போதும் அவனிடம் வம்பு பேசுபவள் இன்று அமைதியாக அவன் முன் அழுது கொண்டிருந்தாள் ...
இது அவள் குணமே இல்லையே என்று கயல் அவர்களை நெருங்க ... மதன் அவளைப் பார்த்துவிட்டு முகத்தை திருப்பிக் கொண்டான்.. என்ன ஆச்சு மதன் அண்ணா எதுக்காக பிரபா கிட்ட கோவமா பேசிகிட்டு இருக்கீங்க என்று அவனிடம் கேட்டதும் ... இது எங்களுடைய விஷயம் கயல்.. உனக்கும் அஜைக்கும் நடுவுல எப்படி நாங்க வரக்கூடாதுன்னு எதிர்பார்க்கிறையோ அதே மாதிரி எங்களுக்கு இடையில் நீ வராத என்றான் மூஞ்சியில் அடித்தது போல ...
நீ என்ன முடிவு எடுக்கிறதா இருந்தாலும் எனக்கு ஈவினிங் குள்ள சொல்லு டி ... நான் உங்க வீட்டுக்கு வரேன் என்று பிரபாவிடம் கூறியவன் கயலை திரும்பி பார்க்காமல் சென்று விட்டான் .. இவனுக்கும் பிரபாவுக்கும் நடுவில் என்ன என்று யோசித்தவள் என்னாச்சு பிரபா உங்க ரெண்டு பேருக்கும்... சண்டையா எப்போதும் போல என்று அவள் கேட்டதும் .. ஒன்னும் இல்ல என்று தன் கண்ணீரை துடைத்துக் கொண்ட பிரபா உள்ளே சென்றாள்..
இப்படி அழுதுகிட்டே இருந்தா பிரச்சனை முடிஞ்சிடுமா டி .. எதுவாக இருந்தாலும் பேசினால் தானே தீர்வு கிடைக்கும்.. நான் உன் பிரண்டு தானே.. என்கிட்ட இது கூட சொல்ல மாட்டியா என்று ஆதங்கமாக அவள் பின்னால் சென்ற படி கேட்டால் கயல் ... நீ மட்டும் என்கிட்ட எல்லா விஷயத்தையும் சொல்லிக்கிட்டு இருக்கியா கயல்... உன் வாழ்க்கையில நீ உன்னோட தனி முடிவு தான் அப்படின்னு இருக்கும்போது ... என் வாழ்க்கையில நானும் தனியா முடிவு எடுக்கக் கூடாதா..
ВЫ ЧИТАЕТЕ
முடிவின் தொடக்கம் நீயே 💙
Любовные романыஎன் ஒவ்வொறு முடிவின் தொடக்கமாக நீ வேண்டும் கண்ணம்மா 💖... It's a toxic love between Ajay krishna and kayal vizhi 💓