இரண்டு மாதங்கள் உருண்டோடின, அந்த நாளுக்கு பிறகு விக்டர் பிரசன்னாவை சிறிதும் தொந்தரவு செய்யவில்லை, அவனை விட்டு விலகியே இருந்தான். அதன்பின் அவனுக்கு வேறொரு ஆடவருடனும் உறவு வைத்து கொள்ளவும் பிடிக்கவில்லை.
அவனது மாற்றங்களை கவனித்த சந்திரிகாவே ஆச்சரியப்பட்டாள், "என்னதான்டா ஆச்சு உனக்கு? உடம்பு கிடம்பு எதாவது சரியில்லையா? உன்னை உன் boytoysஓட பாத்தே கிட்டத்தட்ட ரெண்டு மாசத்துக்கு மேல ஆகுது, திருந்தீட்டியா?" என்று கேட்டாள்.
"I fell in love," என்று அவனது அழகான பல்வரிசையை காண்பித்தவாறு சொன்னான் விக்டர்.
"என்னடா என்னென்னமோ பெனாத்துற? Loveக்கும் உனக்கும் எந்த வித சம்மந்தமும் இல்லன்னு dialogueலாம் பேசுன, இப்ப என்ன ஆச்சு?" என்று கேட்டாள்.
"எல்லாம் அவனை பாக்குற வரைக்கும் அப்படிதான் தோனுச்சு, ஆனா அவன எப்ப முதல் தடவை பாத்தேனோ, அன்னையிலருந்து கரையான் மாதிரி என் மனச கொஞ்சம் கொஞ்சமா அரிச்சுட்டான், அவன் பக்கத்துல வரும் போது எப்படி இருக்கு தெரியுமா? அப்படியே சொர்க்கத்துல இருக்குற மாதிரி ஒரு feeling, அவன் கெடச்சா போதும் மோட்சத்தை அடஞ்ச மாதிரி இருக்கும்," என்று சொன்னான் விக்டர்.
"Wow! விக்டர இப்படில்லாம் பேச வச்சவன் கண்டிப்பா வானத்துல இருந்து இறங்கி வந்தவனாதான் இருக்கணும்," என்று சொல்லி கொண்டே லாவண்யா சந்திரிகாவின் அருகில் அமர்ந்தாள்.
"Hey லாவண்யா, நீ எப்படி இருக்க? என் குழந்தை எப்படி இருக்கு?" என்று கேட்டான் விக்டர்.
"நம்ம குழந்தைன்னு சொல்லி பழகு விக்டர், இது நம்ம மூனு பேரோட குழந்தை," என்று சொன்னாள் லாவண்யா.
"நல்லாருக்கு, scan பண்ணி பாத்தோம் சின்னதா ஒரு புள்ளி மாதிரி தான் தெரியுது," என்று சந்திரிகா சொன்னாள்.
விக்டர் குனிந்து லாவண்யாவின் வயிற்றை பார்த்து, "hai baby, Daddy is so excited to see you baby, come out soon," என்று சொன்னான். அதை கேட்டு இரண்டு பெண்களும் சிரித்தனர்.
BẠN ĐANG ĐỌC
உன்னருகில் நானிருந்தால் II
Lãng mạnLavander marriageஐ பற்றி ஏற்கனவே ஒரு கதையில் சொல்லி இருந்தேன். அதே கருவை கொண்டு புதிய கதாபாத்திரங்களுடன் என் மனதில் உருவான இன்னொரு கதை.