பகுதி-21

159 9 3
                                    

அனைவரும் பேசிக் கொண்டிருக்கையில் விஷால் யாரும் கவனிக்காத நேரத்தில் அந்த flatஐ விட்டு வெளியே சென்று எதிர் flatன் அழைப்பு மணியை அழுத்தினான்.

கேசத்தில் நீர் சொட்ட இடையில் ஒரு துண்டை மட்டும் கட்டிக்கொண்டு விக்டர் வந்து கதவைத் திறந்து விஷாலை ஏற இறங்க பார்த்து விட்டு, "யார் நீ? What do you need?" என்று கேட்டான்.

தன் முன்னால் நிற்கும் வசீகரனை கண்டு ஒரு நொடி சொக்கிப் போன விஷால் 'இவன பாக்கதான் இவ்வளவு நேரமாக்குனியா பிரசன்னா?' என்று மனதிற்குள் கேட்டுக் கொண்டான்.

அப்போது விக்டர் அவன் முகத்தின் முன் இரு முறை சொடக்கு போட்டு, "எந்த உலகத்துல இருக்க? யாரு நீ? இங்க என்ன பண்ற?" என்று எரிச்சலுடன் கேட்டான்.

சட்டென்று தன்னை சுதாரித்து கொண்ட விஷால், "நாங்க எதிர் flatல புதுசா குடி வந்துருக்கோம்," என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டான்.

இவன் பிரசன்னாவின் இளைய சகோதரன் என்பதை புரிந்து கொண்ட விக்டர், "காலைல வேற ஒருத்தர் அந்த flatல குடி வந்திருக்குறதா சொல்லி பால் எல்லாம் குடுத்துட்டு போனாரு, நீ யாரு புதுசா?" என்று ஒன்றும் தெரியாதது போல் கேட்டான்.

"அவன் என் அண்ணன் தான்," என்று சொன்னான் விஷால். அவனது கண்கள் கொஞ்சம் கொஞ்சமாக விக்டரின் அழகு தேகத்தை அளவெடுத்தன, அவனது கண்கள் மெதுவாக இறங்கி அவன் இடை வரை சென்று விக்டர் அணிந்திருக்கும் towelன் உள்ளே என்ன இருக்கும் என்ற ஆர்வத்தை தூண்டியது.

அதற்கிடையில் விக்டர், "காலைல வந்தவரு அவரும் அவரோட wifeஉம் மட்டும் தான் இங்க இருக்க போறதா சொன்னாரு?" என்று கேட்டான்.

இதற்கு முன்னர் எந்த ஒரு ஆணும் தன்னை இவ்வளவு ஈர்த்ததில்லையே, இவன் தன்னை என்ன செய்கிறான் என்று அவன் மூளை அவனை கேள்வி மேல் கேள்வி கேட்டது.

விஷாலின் கண்கள் தன் உடலை மேய்வதை உணர்ந்த விக்டர் மீண்டும் ஒரு முறை அவன் முகத்திற்கு முன் சொடக்கு போட்டு, "Hello! என்னாச்சு உனக்கு? வேலை இல்லைன்னா இப்படியே நீ நாள் முழுக்க நின்னுட்டே இரு, எனக்கு நிறைய வேலை இருக்கு," என்று சொல்லி கதவை அடைத்து விட்டு சென்றான்.

உன்னருகில் நானிருந்தால் IIDonde viven las historias. Descúbrelo ahora