பகுதி-12

183 8 0
                                    

ஒருவழியாக மகாலட்சுமி சுபாஷையும், எமிலியையும் ஏற்றுக் கொண்டார். அப்போது தான் பிரசன்னா தன் கைப்பேசி charge இல்லாமல் off ஆகி போனதை கவனித்தான். உடனே தன் அறைக்குச் சென்று chargerஐ தேடி தன் கைப்பேசியை அதோடு இணைத்து, அதனை மீண்டும் இயக்கினான், அதில் 25 missed calls இருப்பதை கண்டான், அனைத்தும் விக்டரிடம் இருந்து தான்.

உடனே விக்டரின் எண்ணை தொடர்பு கொண்டான், இரண்டாவது மணி அடிக்கும் முன்பே விக்டர் phoneஐ எடுத்து, "hello, எத்தனை தடவை உனக்கு call பண்றது?" என்று தன் காதலனை சாடினான்.

"Sorry, வீட்ல ஒரு problem, அதை கொஞ்சம் sort out பண்றதுல phone charge இல்லாம off ஆனதையே கவனிக்கல," என்று சொன்னான் பிரசன்னா.

"Anything serious?" என்று விக்டர் விசாரித்தான்.

பிரசன்னா அவனிடம் வீட்டில் நடந்தவற்றை விவரித்தான், அதை கேட்டு சிரித்த விக்டர், "அதெல்லாம் விடு இன்னைக்கு நான் என் friendsகூட வெளிய போறேன், நீயும் வந்தா நல்லாருக்கும்னு நான் feel பண்ணேன், அதான் உன்கிட்ட கேட்டேன், ஆனா நீ சொல்றத பாத்தா இன்னைக்கு உன்னால வர முடியும்னு தோனல, it's okay," என்று சொன்னான்.

"அதெல்லாம் ஒன்னும் problem இல்லை, எத்தனை மணிக்குன்னு சொல்லுங்க நான் வர்றேன், என் boyfriend முதல் தடவை என்னை வெளிய கூப்பிடும் போது மாட்டேன்னு சொல்லுவேனா? நிச்சயமா வர்றேன்," என்று சொன்னான் பிரசன்னா.

விக்டர் சொன்னது போல பிரசன்னா மாலை ஏழு மணிக்கெல்லாம் தயாராகி விக்டரின் வீடு வந்து சேர்ந்தான். அவனை கண்ட விக்டர், "இந்த black shirtல நீ எவ்வளவு hotஆ இருக்க தெரியுமா? பேசாம வெளிய போறத cancel பண்ணீட்டு bedலயே ஒரு party வச்சுடலாமா?" என்று அவனை அணைத்தவாறு கேட்டான்.

"உங்களுக்கு எப்ப பாத்தாலும் அதே நெனப்புதான், சீக்கிரம் ready ஆயிட்டு வாங்க போலாம்," என்றான் பிரசன்னா.

அதன்பின் இருவரும் புறப்பட்டு குறிப்பிட்ட ஒரு உணவகத்திற்கு சென்றனர். அங்கு அவர்களுக்கு முன்னால் சந்திரிகாவும், லாவண்யாவும் அமர்ந்திருந்தனர்.

உன்னருகில் நானிருந்தால் IIOù les histoires vivent. Découvrez maintenant