பகுதி-32

148 8 1
                                    

ஒரு மாதம் கழித்து குழந்தைக்கு பெயர் வைக்கும் விழாவை மிகவும் விமர்சையாக மகாலட்சுமி கொண்டாடி, குழந்தைக்கு ஆதர்ஷ் என்று பெயர் சூட்டினார்.

அன்று மாலை விருந்தினர் அனைவரும் சென்ற பிறகு சுபாஷ் Americaவில் இருந்து வந்தான். அவனை கண்ட மகாலட்சுமி, "வாடா ஒரு பெரியப்பன் வர்ற நேரமா இது?" என்று கேட்டார்.

"யாரோட குழந்தை இது?" என்று கேட்டான் சுபாஷ்.

"நான் தான் phoneல சொன்னேனே, நம்ம பிரசன்னாவோட பையன் பொறந்துட்டான்னு, அப்புறம் என்னடா இது முட்டாள்தனமான கேள்வி இது?" என்று ரங்கநாதன் கேட்டார்.

சுபாஷின் குரல் கேட்டு விஷால் இறங்கி வந்தான். தான் கொளுத்தி விட்ட சரவெடி எப்படி எல்லாம் வெடிக்கிறதென்று வேடிக்கை பார்க்க வந்தான். அவன் தான் சுபாஷிற்கு phone செய்து குழந்தையின் பிறப்பில் ஏதோ சந்தேகம் இருப்பதாகவும், தான் அதை பற்றி கேட்டால் உனக்கு ஒன்றும் தெரியாதென்று சொல்லி அலட்சிய படுத்துவதாகவும் சொல்லி அவனை வரவழைத்தான்.

"என் கேள்விய நீங்க சரியா புரிஞ்சுக்கலப்பா, இந்த குழந்தைய லாவண்யா எவனுக்கு பெத்தான்னு கேட்டேன்?" என்றான் சுபாஷ்.

'பளார்' என்று ஒரு கை அவனை அரைய கண்ணத்தை பிடித்துக் கொண்டான் சுபாஷ், அரைந்தது யாரென்று திரும்பி பார்த்தபோது பிரசன்னா கோபத்துடன் கண்கள் சிவந்து அவனருகில் நின்று கொண்டிருந்தான்.

"என் குழந்தைய பத்தி தப்பா பேச உனக்கு என்ன உரிமை இருக்கு?" என்று கேட்டான் பிரசன்னா.

"பிரசன்னா....???" என்று கோபமாக சப்தமிட்டான் சுபாஷ்.

"அவன் உன்னை அரஞ்சதுல என்னடா தப்பு?" என்று கேட்டார் மகாலட்சுமி.

"நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்கம்மா, குழந்தை 45 நாள் முன்னாடி பொறந்திருக்கு, அதுவும் எந்த குறையும் இல்லாம ஆரோக்கியமா, சரியான எடையோட, அப்பவே உங்களுக்கு சந்தேகம் வர வேண்டாம், லாவண்யா கல்யாணத்துக்கு முன்னாடியே pregnantஆ இருந்திருந்தா மட்டும் தான் இது சாத்தியம், அதனாலதான் நான் இந்த கேள்விய கேக்குறேன்," என்று கேட்டான்.

அதை கேட்டதும் அனைவரும் அமைதியாகினர், பிரசன்னாவிற்கும், லாவண்யாவிற்கும் என்ன சொல்வதென்று ஒன்றும் புரியவில்லை. அப்போது பிரசன்னா விஷாலின் முகத்தில் தெரிந்த குரூர புன்னகையை கண்டு எல்லாம் இவனுடைய வேலைதான் என்று புரிந்து கொண்டான்.

இதற்கு மேலும் அமைதியாக இருப்பதில் அர்த்தமில்லை என்று உணர்ந்த பிரசன்னா அனைவரிடமும் உண்மையை சொல்வது தான் ஒரே வழி என்று நினைத்தான். இனி எது நடந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம், என்று நினைத்து அவன் வாயை திறக்கும் முன், "உங்க மூனு பேரையும் பெத்தவடா நான், நீ சொல்ற விஷயத்தை நான் யோசிக்காமலா இருப்பேன்?" என்று மகாலட்சுமி கேட்டார்.

அதைக் கேட்டு அனைவரும் குழப்பத்தில் ஆழ்ந்தனர். "இருந்தாலும் நான் அமைதியா இருந்ததுக்கு காரணம் என்ன தெரியுமா? ஏன்னா எனக்கு எல்லாமே ஏற்கனவே தெரியும்," என்று சொன்னார் மகாலட்சுமி.

அவரின் வார்த்தைகளை கேட்டதும் அனைவரும் மேலும் அதிர்ச்சி அடைந்தனர். பிரசன்னா என்ன சொல்வதென்று புரியாமல் தவித்து நின்றான். மகாலட்சுமி அவனைக் பார்த்து, "அந்த பையனையும், அந்த பொண்ணையும் புறப்பட்டு உடனே நம்ம வீட்டுக்கு வர சொல்லு," என்று சொன்னார்.

"அம்மா... அது..." என்று வாயடைத்து நின்றான் பிரசன்னா.

"அவன் தான் இவ்வளவு தயங்குறான், நீயாவது phone பண்ணி வர சொல்லு லாவண்யா," என்று தன் மருமகளை பார்த்து சொன்னார் மகாலட்சுமி.

பிரசன்னா உடனே தன் கைப்பேசியை எடுத்து தன் காதலனை தொடர்பு கொண்டு சந்திரிகாவையும் அழைத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வரும்படி சொன்னான்.

"இங்க என்னம்மா நடக்குது? கிணறு வெட்ட பூதம் கிளம்புன கதையா, நான் ஒரு பிரச்சினைக்காக அவ்வளவு தூரத்துல இருந்து வந்துருக்கேன், நீங்க புதுசா இன்னொரு பிரச்சினைய கிளப்புறீங்க," என்றான் சுபாஷ்.

"நான் வர சொன்னவங்க வர்ற வரைக்கும் இங்க யாரும் ஒரு வார்த்தை கூட பேச கூடாது," என்று மகாலட்சுமி சொன்னார்.

தொடரும்...

உன்னருகில் நானிருந்தால் IIDonde viven las historias. Descúbrelo ahora