பகுதி-14

166 8 0
                                    

அனைத்தையும் கேட்ட பிரசன்னா, "இப்படி பட்ட அப்பாகிட்ட எப்படி come out பண்ணீங்க?" என்று கேட்டான்.

அதை கேட்டு சிரித்த விக்டர், "நான் எங்க come out பண்ணேன்? அதெல்லாம் பெரிய கூத்து," என்று சொன்னான்.

"என்ன நடந்துச்சு விக்டர்?" என்று கேட்டான் பிரசன்னா.

"அடுத்தவன் கதைன்னா ரொம்ப interestஆ கேப்பிங்களே?" என்று விக்டர் கேலியாக சொன்னான்.

அதை கேட்டு தலை குனிந்து அமைதியாக அமர்ந்திருந்தான் பிரசன்னா, "ஏய் லூசு, நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன், உனக்கு சொல்லாம வேற யாருக்கு இதை பத்தி சொல்லுவேன்? School படிச்சு முடிக்கிற வரைக்கும் நான் நல்ல பையனா தான் இருந்தேன், என் அப்பா நில்லுன்னா நிப்பேன், உக்காருன்னா உக்காருவேன், அவ்வளவு controlஆ வச்சிருந்தாரு military மாதிரி.

"Collegeக்கு போனதுக்கு அப்பறம் தான் நானே என்னோட sexuality பத்தி realise பண்ணேன், அங்க எனக்கு friendஆனவன் தான் பாஸ்கர், அவனும் gay தான், அவனோட சேந்துதான் gay sexனா என்னன்னே நான் experience பண்ணேன்.

"இப்படியே கிட்டத்தட்ட என்‌ படிப்பும் முடிஞ்சது, final semesterஓட final exams நடந்துட்டு இருந்தப்ப familyஓட எல்லாரும் என்னை தனியா விட்டுட்டு என் தாத்தாவோட deathக்கு போனாங்க, நான் சும்மா இருப்பேனா உடனே call பண்ணி பாஸ்கர வீட்டுக்கு வர சொன்னேன்.

"TV soundஅ fullஆ வச்சுட்டு அவன அப்படியே passionஓட kiss பண்ணிட்டு இருந்தேனா, அப்ப என் அப்பா கதவ தெறந்துகிட்டு வந்தாரு, அவரு எதையோ மறந்து விட்டுட்டு போயிட்டாராம் அதை எடுக்குறதுக்காக வந்திருந்தாரு.

"என்னையும் பாஸ்கரையும் ஒன்னா பாத்துட்டு, அப்பப்பா! அவரு முகத்தை அந்த நேரத்துல பாக்கணுமே மூனு நம்பியார், ஆறு மன்சூர் அலிகான், பத்து பிரகாஷ்ராஜ் எல்லாரையும் ஒன்னா mix பண்ணா மாதிரி இருந்துச்சு.

"அப்புறம் என்ன செம்மை அடி, நாயை அடிக்கிற மாதிரி அடிச்சு வீட்ட விட்டு வெளிய வெறட்டிட்டாரு. அதுக்கப்புறம் தெருவுல அனாதையா நின்ன என்னை சந்திரிகாவோட அப்பாதான் என் exams முடிஞ்சு ஒரு வேலைல சேர்ற வரைக்கும் அவரு வீட்ல இருக்க சொல்லி சொன்னாரு, அதுக்கப்புறம் examsல நல்ல marks எடுத்தேன்.

"சென்னைல ஒரு companyல வேலை கெடைச்சது, சென்னைக்கு வந்ததுக்கு அப்புறம் வேலை பாத்துகிட்டே multimedia courses join பண்ணேன், அதுக்கப்புறம் தான் இப்ப நான் வேலை பாக்குற advertising agencyல வேலைக்கு சேந்தேன், அதுக்கு அப்புறம் அந்த ஊர் பக்கம் நான் தலை வச்சு கூட படுக்கல, " என்று தன் வாழ்வில் கடந்து வந்த பாதைகளை பற்றி சொன்னான் விக்டர்.

"உங்க கதையை கேக்கும் போது கஷ்டமா தான் இருக்கு, ஆனா என் அம்மா உங்க அப்பா மாதிரி இல்லையே, அப்படி இருந்தா எதுவும் வேணாம்னு தூக்கி போட்டு வந்துடலாமே, முதல்ல கெஞ்சி கேப்பாங்க, அடுத்து மிரட்டி பாப்பாங்க அதுக்கும் பனிஞ்சு போகலன்னா emotional blackmailதான், அதுலருந்து யாராலயும் தப்பிக்க முடியாது," என்று சொன்னான் பிரசன்னா.

"நீ ஏன் இவ்வளவு பயப்படுற? பொண்ணு பாக்க தான கூப்பிடுறாங்க, போய் பாரு, அந்த பொண்ண தனியா கூட்டீட்டு போய் நீ வேற ஒருத்தர love பண்றதா சொல்லி கல்யாணத்தை நிறுத்த சொல்லி request பண்ணி கேளு, இவ்வளவு அழகான பையன் கெஞ்சி கேட்டா எந்த பொண்ணும் மாட்டேன்னு சொல்ல மாட்டா, அவளே கண்டிப்பா கல்யாணத்த நிறுத்திடுவா, எத்தனை தமிழ் சினிமா பாத்துருப்போம்," என்று புன்னகையுடன் சொன்னான் விக்டர்.

அதன்பின் இருவரும் அங்கிருந்து புறப்பட்டனர். விக்டர் இருசக்கர வாகனத்தில் பிரசன்னாவின் பின்னால் அமர்ந்து கொண்டு, அவனை இறுக்கமாக கட்டி பிடித்துக் கொண்டான்.

"வீட்டுக்கு போகாத, இப்படியே long drive போலாம்," என்று சொன்னான் விக்டர்.

அதை கேட்ட பிரசன்னா தன் வாகனத்தை நகரத்தை விட்டு வெளியே செல்லும் பாதையில் செலுத்தினான். போகும் வழியெல்லாம் விக்டர் கொஞ்சம் கூட அமைதியாக வரவில்லை.

அவனது கைகள் பிரசன்னாவின் தேகமெங்கும் விளையாடியது, அவ்வப்போது அவனது கழுத்தில் சிறு முத்தங்களும் பதித்தான். "நீங்க இப்படிலாம் பண்ணீங்கன்னா என்னால எப்படி வண்டி ஓட்ட முடியும்? என்னால roadல concentrate பண்ணவே முடியல," என்று பிரசன்னா சொன்னான்.

"இவ்வளவு அழகான பையன இவ்வளவு நெருக்கமா வச்சுகிட்டு எதுவும் பண்ணாதன்னு சொன்னா எப்படி இருக்கும்?" என்று சொல்லி பிரசன்னாவின் காதை லேசாக கடித்தான் விக்டர்.

பிரசன்னா தன் வாகனத்தை ஆள் அரவமற்ற ஒரு இடத்தில் கொண்டு போய் நிறுத்தி, தன் வாகனத்தில் இருந்து இறங்கி விக்டரின் சட்டையை பிடித்து அவன் உதடுகளை மிட்டாயை ருசிப்பது போல் சுவைத்தான். விக்டர் மதி மயங்கி போய் தன் உள்ளம் கவர்ந்தவனை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.

தொடரும்...

உன்னருகில் நானிருந்தால் IIDonde viven las historias. Descúbrelo ahora