தன்னை அறியாமலே அவள் மீது பார்வையை நிலைத்தவன் பின் மோகனின் தோளில் கையை போட்டுக்கொண்டு ராமனின் இல்லத்தை நோக்கி சென்றான் .தனது உடமைகள் அனைத்தையும் சீராக அடுக்கி வைத்திருந்த ராமன் அதை மீண்டும் சேரி பார்த்தபடி இருக்க வாசலில் "டேய்ய் குண்டா "என்ற இருவரின் குரலில் திரும்பியவன் அங்கே நின்றிருந்த மாறனையும் மோஹனையும் கண்டு ஆனந்த அதிர்ச்சி அடைந்து ஓடி சென்றவன் அவர்கள் இருவரையும் அணைத்துக்கொண்டான் .
அவர்கள் சத்தம் கேட்டு தாமரை,சௌபாக்கியவாதி முற்றத்திற்கு வர தாமரையின் மகளோ மோகனிடம் ஓடியவள் அவன் என்றும் அவளிற்காக வாங்கி வரும் மிட்டாயை கேட்க அவனோ அன்று ஏதோ ஒரு நினைவில் மிட்டாய் வாங்க மறந்திருந்தான் .
அவள் உதட்டை பிதுக்க மாறனோ தன் சட்டை பையில் இளவரசிக்காக வாங்கி வைத்திருந்த மிட்டாயை எடுத்தவன் போகும் வழியில் மற்றொன்று வாங்கிக்கொள்ளலாம் என்று நினைத்தவன் ஒற்றை காலில் மண்டியிட்டு அவள் முன்னே அந்த மிட்டாயை நீட்ட அவனை குழப்பமாய் பார்த்தவள் பின் தன் அன்னையை பார்த்தாள்.
தாமரை வாங்கிக்கொள் என்று கூற வாங்கிக்கொண்டவள் அவனிடம் "thank யூ மாமா "என்க
அவனோ சிரிப்புடன் அவள் தலையை அழுத்தியவன் "உங்க பேர் என்ன குட்டி மேடம் ?"என்று கேட்க
அவளோ "மை நேம் இஸ் சுஜாதா studying செகண்ட் ஸ்டாண்டர்ட் உங்க பேர் ?"என்று கேட்க
அவனோ சிரிப்புடன் "மாறன் "என்றான் .
அவனிடம் "நைஸ் நேம் "என்றவள் பின் இலா சித்தி என்று அவள் பெயரை ஏலம் விட்டுக்கொண்டே சென்று விட்டால்.
அவள் செல்வதை சிரிப்புடன் பார்த்த தாமரை "சித்தி இல்லாம ஒன்னையும் சாப்பிடாது இந்த வாண்டு என்றவாறு அவன் புறம் திரும்பியவர் "என்னடா உனக்கு இப்போ தான் வீட்டுப்பக்கம் வர வழி தெருஞ்சுதா ?ஏன் வெளியவே நிக்குற வந்து உக்காரு காபி எடுத்துட்டு வரேன் "என்று கூறி உள்ளே செல்ல உள்ளே வந்து அமர்ந்தனர் மூன்று நண்பர்களும் .
YOU ARE READING
உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)
Romanceஅவள் அன்பில் அவன் சுகமாய் தொலைந்த கதை