27

2.6K 141 87
                                    

காலை அழகாய் விடிய இளவரசி தன் கண்களை கசக்கி எழுந்தவள் புதியதாய் ஏதோ ஒரு பாரத்தை தன் மேல் உணர்ந்தவள் என்ன என்று பார்க்க அவள் இடையை வளைத்தபடி ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் ராஜா .அதை கண்டு சிரித்தவள் அவன் கேசத்தை கலைத்துவிட்டு அவன் பிடியில் இருந்து மெல்ல எழுந்தவள் நேரத்தை பார்க்க அதுவோ ஆறு என்று காட்டியது .அவளிற்கே நம்ப முடியவில்லை அவள் ஆறு மணிக்கு எழுந்ததை .

சென்று குளித்து முடித்து வந்தவள் அங்கிருந்த ஆளுயரக்கண்ணாடியின் முன் நின்று ஈரமான முடியை உலர்த்த அதில் இருந்து வந்த நீர்த்துளிகள் முகத்தில் பட்டு தெறிக்க எழுந்தான் ராஜா .

ராஜா "என்ன நம்ம மூஞ்சில மட்டும் மழை பெய்யுது "என்று நினைத்தவன் அங்கு இளவரசியை பார்த்து திடுக்கிட்டான் .

தூக்கம் மொத்தமும் போக எழுந்து அமர்ந்தவன் கத்த துவங்கிவிட்டான் "அடியேய் அரிசி மூட்டை எதுக்கு டி என் ரூம்ல இருக்க ?எங்கடி என் அண்ணன் ?வயசு பையன் இருக்குற ரூம்ல இப்டி வந்து நிக்கிற பாக்குறவங்க என்ன நினைப்பாங்க கெளம்புடி முதல்ல"என்று கூற

அவளோ அவனை அட பைத்தியமே என்பதை போல் பார்த்தவள் அங்கிருந்த குங்குமச்சிமிழிலிருந்து குங்குமத்தை எடுத்து நெற்றி வகிட்டில் வைக்க அப்பொழுதே ராஜாவிற்கு தங்களுக்கு திருமணம் ஆனதே நினைவில் வந்தது .

தன் தலையில் தானே தட்டி கொண்டவன் மணியை பார்க்க அது ஆறரை என்று காட்டியது .அவன் குளியலறைக்குள் செல்ல இளவரசியோ தலையில் அடித்துக்கொண்டு வெளியே வந்தாள்.அவள் ராஜாவின் அறையில் இருந்து வருவதை பார்த்து சாந்தி வாயை பிளக்க மஹாவோ அவள் தலைக்கு குளித்திருப்பதை பார்த்து மேலும் அதிர்ந்தாள் .

மகா "இளவரசி "என்க

அவளோ அலட்சியமாய் அடுப்படிக்குள் செல்ல போனால் .அவள் கையை பிடித்து நிறுத்தியவள்"என்னடி நெனச்சுக்கிட்டு இருக்க உன் இஷ்டத்துக்கு பண்ற ?யாரை கேட்டு அவன் ரூம்ல தங்குன?"என்க

உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)Where stories live. Discover now