7

2.7K 163 67
                                    

வாரமும் கடக்க முருகன் மேகலா திருமணமும் அடுத்த நாள் நடக்க இருந்தது .வீட்டில் சொந்தங்கள் அனைத்தும் நிறைந்து விட ராஜாவும் மாறனும் மாடிக்கு விரட்டப்பட்டனர் .

விரட்டப்பட்டனர் என்பதை விட இருவரும் விரும்பியே அந்த தனிமையை நோக்கி மாடிக்கு சென்றனர் .இருவருக்கும் புறம் பேசுவது என்பது அறவே பிடிக்காது ஆனால் சொந்தங்கள் நிறைந்து விட்டால் புறம் பேசும் பேச்சுக்கு பஞ்சமா இருக்கும் ஆதலால் இருவரும் இரண்டு போர்வையையும் தலையணையையும் எடுத்து வந்தவர்கள் சற்று குளுமையாயிருக்க வேண்டுமென்று அங்கே தண்ணீர் டேங்கில் தண்ணீரை பிடித்து அவர்கள் உறங்க போகும் இடத்தில் தெளித்து விட்டு அது காய்ந்த பின் அதில் போர்வையை விரித்தபடி படுத்தனர் .

ராஜா "ஏன் அண்ணே அங்க காலேஜ் எப்படி போகுது?சும்மா தான் இருக்கியா இல்ல அங்கேயும் ஏழரைய கூட்டி வச்சுருக்கியா ?"என்று கேட்க

மாறனோ தான் செய்து வைத்த செயலை நினைத்து சிரித்தவன் ராஜாவிடம் திரும்பி படுத்து கூறத்துவங்கினான் "அது ஒரு குட்டி கலாட்டாவே நடந்துருக்குடா மண்டக்கசாயம் .என் டைரி சயின்ஸ் வாத்தியாருஹ் ஒரு மலையாளி .அந்த ஆளு ப்ராஹ்மின்ஸ்ட மட்டும் நல்லா பேசி நல்ல மார்க் போட்டு விடும் மத்த பசங்க கிட்ட எல்லாம் எரிஞ்சு எரிஞ்சு விழும்.மனுஷன் என்ன பண்ணாலும் சபரி மலைக்கு மாலை போட்டு இருக்கேல மட்டும் ரொம்ப சாதுவா மாறிருவாரு டா.நா அவர் மாலை போட்ருக்குறத பார்த்துட்டு எங்க சமையல்காரர் ஒருவரும் மாலை போட்ருந்தாரு அவரும் மலையாளி தான் .அவர் கிட்ட பேசுற மாறியே நா அந்த ஆள ஓரக்கண்ணால் பாத்துட்டே எங்க சமயக்காரர்ட்ட நாயரே நீ இந்த தடவ மலைக்கு மட்டும் போடி உன்ன புலி அடிச்சு போடுதா இல்லையானு மட்டும் பாருன்னு சொல்லிட்டேன் ."என்க

ராஜா "அட பாவி அண்ணா வீட்ல தான் எலி மாறி இருக்க அப்பறோம் என்னாச்சு ?"என்க

மாறனோ சிரித்தவன்"அப்பறோம் என்ன அந்த மனுஷன் டென்ஷன் ஆகி இன்டெர்னல் fail ஆக்கிட்டான் பட் எஸ்ட்டெரனல்ல பேப்பர் வெளிய போய் இந்த பையனுக்கு எப்படி fail போட்டீங்க ? paperah சப்மிட் பண்ணுங்கன்னு சொல்லிட்டாங்க .அப்பறோம் இன்டெர்னல் பேப்பர் பார்த்துட்டு அந்த மனுஷனை left right வாங்கிட்டாங்க யூனிவெர்சிட்டில .ஒரு மாசம் சஸ்பென்ஷன் குடுத்துட்டாங்க அவருக்கு "என்க

உன் அன்பில் சுகமாய் தொலைந்தேனடி(முடிவுற்றது)Where stories live. Discover now