பாகம் -7

563 7 1
                                    

பிரண்ட்ஸ்.... என் ஸ்டோரி நல்லா இல்லையா.... ஸ்டார்ஸ், கமெண்ட்னு எதுவுமே கிடைக்க மாட்டேங்குது.... குறை இருந்தா கூட சொல்லுங்க.... ப்ளீஸ்.... வாசிக்குற ரீடர்ஸ் எதாவது சொன்னா எனக்கு எழுதணும் னு ஆர்வம் வரும்... ப்ளீஸ் 🙏🏻
🌙🌙🌙🌙🌙🌙
காரில் சென்று கொண்டிருக்கும் போதும் நிலாவின் இதழ் ஏதோ ஒன்றை முனங்கி கொண்டே வந்தது.... அதை நம் தீரனும் கவனித்து கொண்டு தான் இருந்தான்....
திடீரென தீரனிடம் திரும்பிய நிலா " சார்.... எனக்கு ஏசி ஒத்துக்காது.... சோ கொஞ்சோ ஆப் பண்றீங்களா... எனக்கு ஜன்னல் ஓபன்ல இருக்கனும்.... இல்லன்னா உடம்புக்கு ஒத்துக்காது.... ப்ளீஸ் சார் என்று கேட்டவளுக்கு புன்னகையை பதிலாய் தந்தவன் ஏசியை ஆப் செய்தான்....
தேங்க்ஸ் சார் என்றவள் டோர் கண்ணாடியை திறக்க போக, அவளின் நேரமோ என்னவோ  டோர் கண்ணாடியை திறக்க முடியவில்லை.... " பாகுபலி என்று கத்தி கொண்டே டோர் கண்ணாடியை திறக்க முயற்சி செய்தவவளின் வார்த்தைகள் டோர் கண்ணாடிக்கு கேட்டதோ இல்லையோ நம் தீரனின் செவிகளில் நன்றாகவே கேட்டது.... வாய் விட்டு சிரித்தவன் காரை நிறுத்தினான்...
சிரிக்காதீங்க சார்.... ஆணி வச்சி அடிச்சிருக்கீங்க போல.... திறக்கவே மாட்டேங்குது என்று இதழ் வளைத்து கைகளை கட்டிக்கொண்டு செல்லமாக கோபித்து கொண்டவளின் செயலை தீரனால் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.... அவளை தாண்டி அந்த பக்கம் உள்ள டோர் கண்ணாடியை திறக்க சென்றவனின் உடல் பெண்ணின் மேனியில் உரச இவ்வளவு பக்கத்தில் ஆணின் ஸ்பரிசம் முதல் முறையாக இருப்பதால் என்னவோ நிலாவுக்கு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க ஆரம்பித்து விட்டது.... கண்களை இறுக்க மூடி கொண்டாள்....
பெண்ணவளின் சூடான மூச்சு காற்று தன் கன்னம் தீண்டுவதை உணர்ந்த தீரன் டோர் கண்ணாடியை ஓபன் செய்யாமல் அதே பொசிஷனில் அவள் பக்கம் திரும்ப அவன் கண்டது கண்களை இறுக்க மூடி மூச்சு வாங்கும் தன்னவளை தான்....
அவள் கண்களில் பார்வையை பதிய வைத்த தீரனின் கண்கள் மெதுவாக  கீழிறங்கி அவள் உதட்டில் வந்து நின்றது.... சுவைக்க தூண்டும் தன் உணர்வுகளை கட்டுப்படுத்த தெரியாமல் திணறியவன் கண்களை இறுக்க மூடி டோர் கண்ணாடியை ஓபன் செய்து தன் இருக்கையில் சடாரென சாய்ந்து கொண்டு கைகளை இணைத்து பின் தலையில் வைத்து கண்களை இறுக்க மூடி ஆசுவாசப்படுத்தினான்....
ஓபன் செய்தவுடன் வந்த காற்று பெண்ணவளின் கன்னம் தீண்டி சென்றதில் கண்களை மெல்ல திறந்தவள் சிரித்து கொண்டே தீரனிடம் திரும்ப அவன் இருக்கும் நிலையை பார்த்து...
" சார் என்னாச்சி.... ஆர் யூ ஓகே என்று கேக்க... பதில் எதுவும் கூறாமல் தலையை மட்டும் அசைத்து வேகமாக காரை ஓட்டிக்கொண்டு  பத்தே நிமிடத்தில் நிலாவின் வீட்டின் முன் நின்றான்...
கீழே இறங்கிய நிலா.... தேங்க்ஸ் சார் என்றிட, ம்ம்ம் என்று மட்டும் கூறியவன் மறந்தும் அவளிடம் திரும்பவில்லை...
காரை வேகமாக எடுத்து கொண்டு புறப்பட்டான் தீரன்....
என்னாச்சி இவருக்கு.... நல்லா தானே இருந்தாரு என்ற யோசனையுடன் வீட்டினுள் நுழைந்தாள் ரதிநிலா.
❤️❤️❤️❤️❤️❤️
காரில் சென்று கொண்டிருந்த தீரன் பீச் பக்கத்தில் காரை நிறுத்தி தன் மனதை சமன்படுத்தி கொண்டிருந்தான்.... அவனின் அலைபேசிக்கு அழைப்பு வர அதில் பீம் என்று எழுதிருந்தது....
" சொல்லு பீம்.... போன வேலை என்னாச்சி...
பாஸ்.... நீங்க சொன்ன மாதிரியே அவன தூக்கிட்டோம்....
அவன நம்ம டார்க் ரூம்க்கு கூட்டிட்டு போ.... நா இன்னும் 10 நிமிசத்துல அங்க இருப்பேன் என்று கூறி அழைப்பை துண்டித்தான் தீரன்....
😈🔥😈🔥😈🔥😈
டார்க் ரூம்....
இருட்டான அந்த அறையில் நாற்காலியில் ஒருவன் குத்துயிரும் கொலை உயிருமாக உடம்பில் காயங்களுடன் கட்டப்பட்டிருக்க.... அறை முழுவதும் ரத்த வாடையில் நிரம்பி இருந்தது....
டக் டக் டக் என்ற பூட்சின் சத்தத்துடன் கம்பீரமாக உள்ளே நுழைந்தான் ரணா.... ரண தீரன்.... ஊசலாடி கொண்டிருந்த அந்த உருவத்தின்  முன்னால் சிங்க முகம் பொறிக்கப்பட்ட நாற்காலியில் அமர்ந்தவன் கால் மேல் கால் போட்டு தன் இடக்கையை நாடியில் முட்டு கொடுத்தும் வலக்கையை இருக்கையின் கை பகுதியில் உள்ள சிங்க முகத்தை தடவி கொண்டும் இருந்தான்.... பீம் என்று கத்தியவனின் முன் வந்து நின்றான் பீம் என்று அழைக்கப்படும் பீம் பாய்....
தீரனின் கண் அசைவை பார்த்தவன் மயங்கி கிடந்தவன் மூஞ்சியில் தண்ணீரை எடுத்துட்டு ஊற்றினான்...
மயக்கத்தில் இருந்து பதறி அடித்து எழுந்தவன் கண்டது தன் முன்னே எமனை போல் அமர்ந்திருக்கும் ரணாவை தான்...
சார் .... எனக்கு எதுவும் தெரியாது.... அவங்க தான் அந்த பைல ( file ) கேட்டாங்க.... பணத்துக்கு ஆசப்பட்டு நானும் தப்பு பண்ணிட்டேன்.... மன்னச்சிருங்க சார்.... ப்ளீஸ் சார் ப்ளீஸ் சார் என்று உயிர் பயத்தில் கெஞ்சி கொண்டிருந்தான் எதிரில் இருப்பவனுக்கு இரக்க குணம் கிடையாது என்பதை மறந்து....
துரோகம் செய்து விட்டு தெரியாமல் செய்தேன் என்ற வார்த்தையை கேட்டதும் மொத்த மிருகமாக மாறிய ரணதீரன் அருகில் இருந்த கத்தியை எடுத்து அவனின் தொடையில் குத்தி,இன்னும் ஆழமாக உள்ளே இறக்கி கீறி கொண்டே வந்தான்.... என்கூடவே இருந்துட்டு துரோகம் பண்ணிட்டு மன்னிச்சிரு னு சொல்றியா டா வெறியில் கத்தியவன் சதக் சதக் என்று கத்தியால் அவன் முகத்தில் குத்தினான்.... அதோடு விடாது அருகில் இருந்த அமிலத்தை எடுத்து அவனின் மூஞ்சியில் ஊற்றினான்...
உயிர் போகும் வலியை அனுபவித்தவன் அலறி துடித்தான்.... பீம் இவன அடையாளம் தெரியாத படி செதச்சிரு என்றவன் வேக நடையுடன் வெளியேறினான்....
பாஸ் சொல்வதை வேத வாக்காக நினைக்கும் தீரனின் நம்பிக்கைக்குரிய விசுவாசி பீம் அவன் சொன்னதை செய்ய கிளம்பினான்....
*******************
வீட்டினுள் நுழைந்த நம் ரதியை அவள் அம்மா கட்டி கொண்டாள்.... " உனக்கு ஒன்னும் ஆகலையே மா.... நீங்க நல்லா இருக்க தான என அவள் கை கால் எல்லாம் ஏதாவது அடிப்பட்டிரக்குறதா என பார்த்தப்படியே கேட்டார் தேவி....
" மா.... எனக்கு ஒன்னும் இல்ல மா.... என்ன இங்க ஒரு சார் தான் கூட்டிட்டு வந்து விட்டாரு.... கார்த்தி எப்டி இருக்குறான்.... போன் பண்ணானா.... நிவி எங்க, அப்பா எங்க, அண்ணா இன்னும் வரலையா என தன் துப்பட்டாவின் பின்னை கழட்டியப்படி கேட்டாள்....
அப்பா தூங்கிட்டு இருக்காங்க.... கலவரம் நடக்குறது லாம் அப்பாக்கு இன்னும் தெரியாது.... நிவி பக்கத்து வீட்டுக்கு போயிருக்குறா.... கார்த்தி போன் பண்ணான் டி.... ஷர்மிய கூட்டிட்டு வந்துட்டானாம் ( ஷர்மி,கார்த்தியின் தங்கை )... சரி நீ போய் சாப்டு.... போ என்ற தேவி அவரின் வேலையை கவனிக்க சென்றார்....
தன் நட்பு வட்டங்களுக்கு அழைப்பு விடுத்து அனைவரும் அவரின் வீட்டிற்கு சென்று விட்டார்களா என்று கேட்டு விசாரித்த நிலா.... ஷர்மிக்கு போன் செய்தாள்...
                                                      ---தொடரும்

அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚Where stories live. Discover now