பாகம் -14

463 7 40
                                    

கண்ணில் கண்ணீர் வழிய அந்த வீட்டின் கார்டனில் நின்ற நிலாவின் மனம் சிறிது நேரத்திற்கு முன் நடந்த நிகழ்வை நினைத்து கதறியது....

சிறிது நேரத்திற்கு முன்......

ரத்ன வேல் ஒரு மைக்கை எடுத்து கூட்டத்தை பார்த்து "Thanks to all.... என் பொண்ணோட பர்த்டேக்கு வந்ததுக்கு.... இப்போ ஆரம்பமாக போகுது.... எல்லாரும் என்ஜோய் பண்ணுங்க என கூற கூட்டத்தில் வைஷாலியின் பிரண்ட்ஸ் கரவோசங்களை எழுப்பினர்.... வைஷாலி சிரித்து கொண்டே கேக்கை வெட்ட பலூன் வெடிக்கப்பட்டு ஸ்பிரே அடிக்கப்பட்டு மிக விமர்ச்சயாக செலிபிரேட் பண்ண....அவள் தந்தையின் வாயில் கேக்கை ஊட்டி thanks daddy என கூறி கட்டிக்கொண்டாள்....  தன் மகளுக்கு சிரித்து கொண்டே திரும்பி ஊட்டினார் ரத்னம்.... அவள் அம்மா சாந்திக்கும் கேக்கை ஊட்டி கட்டி கொண்டாள்....
பிறகு அனைவரும் சாங் போட்டு டான்ஸ் ஆடி கொண்டே தங்கள் கையில் இருந்த ஜூசை பருகியும்,வைஷாலிக்கு கிப்ட் கொடுத்தும் சென்றனர்.....

இதில் கலந்து கொள்ளாமல் நிலாவோ அந்த குழந்தையோடு விளையாடி கொண்டிருந்தாள்.... கண்ணை கட்டி கொண்டு தன்னை கண்டுபிடிக்க வேண்டும் என அந்த குழந்தை கூற சரி என கூறி சிரித்தவள் ஸ்பெக்ஸ்சை கழட்டி பர்ஸில் வைத்து தன்  தங்கையிடம் கொடுத்து விட்டு கண்ணை கட்டிக்கொண்டு விளையாட சென்றாள்....
அக்கா... நா இங்க இருக்கேன்.... கண்டுபிடி... வா கா.... கண்டுபிடி என சிரித்து கொண்டும் இவளை தொட்டு தொட்டு நகண்டு கொண்டும் அந்த மழலை விளையாட " இப்போ உன்ன கண்டுபிடிச்சிருவேன் பாரு என சிரித்து கொண்டே.... கையை காற்றில் பறக்க விட்ட படி தேடி கொண்டே இருந்தவளை விடாமல் துரத்தி கொண்டே இருந்தது தீரனின் கண்கள்....
அக்கா அக்கா இங்க.... என கூறி அந்த மழலை ஓட  எந்த திசையில் இருந்து சவுண்ட் வந்ததோ அந்த திசையில் நடந்து சென்றவள் ஜூசை கொண்டு சென்ற பெரியவர் மீது இடிக்க.... அவர் கொண்டு வந்த ஜூஸ் அங்கு நின்று கொண்டிருந்த வைஷாலி மீது கொட்டி விட.... தான் யாரையோ இடித்து விட்டோம் என கண் கட்டை அவிழ்த்து திரும்பியவள் கண்டது முறைத்து கொண்டே நின்ற வைஷாலியை தான்.... அந்த பெரியவரின் பின்னால் தான் நிலா நின்றாள்.... சாரி மா வேணும் னு பண்ணல என அந்த பெரியவர் வைஷாலியிடம் கெஞ்ச "யூ கெழட்டு நாயே என அடிக்க கையை ஓங்கியவளின் கையை பிடித்து நிறுத்தினாள் நிலா....
     வைஷு.... தப்பு என் மேல தான்.... அந்த தாத்தா மேல எந்த தப்பும் இல்ல.... நான் தான் கண்ணு கட்டிருந்ததால தெரியாம இடிச்சிட்டேன்.... வேணும்னா என்ன அடிச்சிக்க என கூற
         தன் கையை பிடித்திருந்த அவளின் கையை பார்த்த வைஷாலி " ஏய் குருடி.... அதான் கண்ணு தெரியல னு ஸ்பெக்ஸ் போடுறால்ல.... அத எங்க டி.... என்ன எவனாவது சொன்னானா.... ஸ்பெக்ஸ் போடலன்னா அழகா இருக்குற னு.... எவன மயக்க ஸ்பெக்ஸ கழட்டுன.... உனக்கு தான் கண்ணு தெரியாதுல்ல.... அப்போ அத போட்டா என்ன  என வார்த்தைகளை கத்தியாக வீச அதை கேட்டவளின் கண்ணில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது....
ஏய் என்ன டி இன்னும் என் கைய புடிச்சிட்டு இருக்குற.... கருப்பி.... என் வீட்டு வேலைக்கு கூட தகுதி இல்லாத ஆளு.... நீ என் கைய புடிக்கிறியா என தன் கையை வேகமாக உருவி அடிக்க சென்றவளின் கையை பிடித்தது ஒரு வலிய கரம்....
தன் மேல் அடி விழாமல் இருப்பதை உணர்ந்த நிலா கண்ணில் கண்ணீரோடு பார்க்க.... தன் கரத்தை பிடித்தவர் யாரென்று வைஷாலி பார்க்க.... கண்ணில் அனல் தெறிக்கும் கோபத்துடன் ருத்ர மூர்த்தியாக நின்றான் தீரன் 👿🔥
அவள் கையை கீழே சரித்தவன்....விட்டான் ஒரு அறை வைஷாலியின் கன்னத்தில்.... கன்னத்தை பிடித்து கொண்டே அவனை பார்க்க.... கண்ணில் கண்ணீரோடு அதிர்ச்சியாக நிலா பார்க்க... பேச தொடங்கினான் தீரன் .... இல்லை இல்லை.... கர்ஜிக்க தொடங்கினான் "ரணதீரன்"..... " என்ன டி சொன்ன.... குருடியா.... யார டி குருடினு சொல்ற.... கொன்னு பொதச்சிருவேன்.... பொம்பளையா டி நீ.... கொஞ்சோ கூட மனசாட்சி இல்லாம அவள கஷ்ட்டப்படுத்துற.... என்ன சொன்ன.... என்ன தகுதி இருக்கு னு தான.... இவ யாரு தெரியுமா.... என் பொண்டாட்டி.... இந்த ரணதீரனோட பொண்டாட்டி என நிலாவை தன் உடலோடு ஒட்டி அந்த வீடே அதிரும் அளவுக்கு கர்ஜித்தான் ரண தீரன்.....  அதை கேட்டு எல்லாரும் அதிர்ச்சி அடைந்தனர் நிலா உட்பட.....
இந்த தீரனோட பொண்டாட்டியவே அடிக்க வரியா என கூறி பற்களை நரநரவென கடித்தவன் மீண்டும் ஒரு அறை விட்டான் வைஷாலிக்கு.... அதில் கீழே விழுந்தாள் வைஷாலி....
ரணாஆஆஆ என கோபத்துடன் கத்தினார் வைஷாலியின் அப்பா ரத்னவேல்
அவரை திரும்பி ஒரு பார்வை பார்த்தான் தீரன்.... அவன் கண்ணில் தெரிந்த கோபகனலை கண்டு பயந்து இரண்டடி பின்னால் சென்றார் ரத்னம் ....
தன் வாயில் விரல் வைத்து உஷ்ஷ்ஷ் என்று ரத்னத்தை பார்த்து கூறிய தீரன்....
கீழே கிடந்த வைஷுவை பார்த்து " என் நிலாவ கஷ்ட்டப்படுத்தி கண்ணீர் விட வைக்கணும் னு நினைக்கிறது அந்த கடவுளாவே இருந்தாலும்  சரி கருவறுத்துருவான் இந்த ரணதீரன்.... உன் அம்மாவுக்காக  உன்ன விடுறேன் என கூறினான்
      அடுத்து,நிலாவை பார்த்த தீரன்.... இந்த மாதிரி ஒரு சூழ்நிலைல என் காதல சொல்வேன் னு நான் நினைக்கல " ஐ லவ் யூ நிலா.... நா உன்ன காதலிக்கிறேன் என கூறி அவள் நெற்றியில் தன் காதலுக்கான முதல் சின்னத்தை பதித்தான்.... இதை அங்குள்ள அனைவரும் வாயை பிளந்து கொண்டு பார்த்தனர்....வைஷாலிக்கோ நிலாவின் மீது வெறுப்பு கூடியது.... தான் காதலித்த  ஒருவன்,தன்னிடம் மட்டும் கோவத்தை காண்பித்து விட்டு இந்த கருப்பியை காதலிக்குறானே என வஞ்சத்தை தன் மனதில் விதைத்தாள்....
தீரனின் இதழ் நிலாவின் நெற்றியில் நீண்ட நேரமாக இருக்க.... " அவனை தள்ளி விட்ட நிலாவோ அழுது கொண்டே வீட்டை விட்டு வெளியே ஓடினாள் " தீரன் அவள் ஓடுவதை பார்த்து கொண்டே நின்றான்

அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚Dove le storie prendono vita. Scoprilo ora