இரவு.... பலரின் மறைக்கப்பட்ட முகங்களை வெளிச்சமிட்டு காட்டும் ஒன்று.... கண்ணீர், கவலை, கதறல் என இந்த இரவில் தன் உண்மையான முகத்தை வெளிப்படுத்தாதோர் யாரும் இல்ல.... இந்த இரவில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மன நிலையில் இருந்தனர்....
வீட்டிற்கு வந்த நிலாவோ தன் தங்கையிடம் இன்று நடந்ததை யாரிடமும் கூற வேண்டாம் என கூறி விட்டாள்....
அவளும் தன் அக்கா சந்தோசம் தான் முக்கியம் என நினைத்து தன் அறைக்கு சென்றாள்....**************
காலை பொழுது அழகாக விடிய எல்லோரும் அவர் அவர் வேலைகளை திறம்பட செய்து கொண்டிருந்தனர்....காலையிலேயே உறவினர் கல்யாணத்திற்கு சென்ற கணேசணும் தேவியும் திரும்பி வந்து விட மாறன் வேலைக்கு செல்லும் முன் காலை உணவை தயாரித்து அவனை சாப்பிட வைத்து அனுப்பினார் தேவி...
ஏனோ வந்ததிலிருந்து கணேசன் முகம் எதையோ யோசித்து கொண்டிருப்பது போல் இருந்தது.... தேவியும் கேட்டு கேட்டு பார்த்து விட்டார்.... ஆனால் ஒன்றும் இல்லை என்ற பதிலை தவிர வேறு எதுவும் அவர் கூறுவதாக இல்லை....
நிலாக்கு ஒரு குணம் உண்டு.... அவள் எப்பேர்ப்பட்ட கஷ்ட்டத்தில் இருந்தாலும் அதை வெளிகாட்ட மாட்டாள்.... அவள் மனதில் கஷ்ட்டம் இருக்கிறதா என சந்தேகப்படும் படி நடந்து கொள்வாள்.... அவள் பேச்சிலும் செயலிலும் அத்தனை உற்சாகம் இருக்கும்.... நேற்று தன்னால் காயப்பட்ட பெண்ணா இவள் என சந்தேகம் கொள்ளும் படி நடந்து கொள்வாள்.... ஏனென்றால் இந்த குடும்பத்தோட சந்தோசம்,தான் தான் என்று அவளுக்கு தெரியும்.... அவள் எப்பொழுதும் போல் இருந்தாள் தான் வீடு நார்மலாக இருக்கும்.... இல்லையெனில் கவலையின் உருவமாக வீடு மாறி விடும்..... அதனால் தான் கவலையை கொஞ்சம் கூட முகத்தில் காட்டிகொள்ளாமல் இருப்பாள்....
வழக்கம் போல் பிரஷ் செய்து விட்டு நேற்று அவள் வடித்த கண்ணீர் கொஞ்சம் கூட தெரியாமல் மலர்ச்சியின் மறு உருவமாய் டான்ஸ் ஆடிக்கொண்டே தன் தந்தையின் முன் வந்து நின்றாள்....
" என்ன பா... காலைலயே வந்துருவோம் னு சொல்லவே இல்லை என டான்ஸ் ஆடிக்கொண்டே கேக்க
வயல் வேலை இருக்குல்ல மா.... அதான் வந்துட்டேன்.... சரி நீ சொல்லு நேத்து function எப்டி போச்சி என மனதில் எதையோ நினைத்து கொண்டு அவள் முகத்தில் மாற்றம் தெரிகிறதா என பார்த்து கொண்டே கேட்டார் கணேசன்....
YOU ARE READING
அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚
Short Storyஇது ஒரு அழகான காதல் கதை.... காதலுக்கு அழகு முக்கியம் இல்லை.... மனது தான் முக்கியம் என்பதை பெண்ணவளுக்கும்.... காதல் எப்பேர்ப்பட்ட மனிதனையும் மாற்றும் என்பதை ஆணவனுக்கும் உணர்த்தும் கதை