நிலாவின் தீரன் -2

919 5 0
                                    

உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த தீரனிடம் வந்தான் அவனின் நண்பன் கார்த்திக்.... டேய் இருக்குற உடம்பு போதாதா உனக்கு.... இன்னும் ஏன் டா இதெல்லாம் பண்ணிட்டு இருக்க என்று கேட்டவனை ஒரு பார்வை பார்த்த தீரன்... உடற்பயிற்சி செய்து கொண்டே செடி வளந்துட்டுனு நெனச்சா மட்டும் போதாது மச்சான்.... இன்னும் பராமரிக்கணும்.... அது உனக்குலாம் தெரியாது.... மூடிட்டு வந்த வேலைய பாரு என்று கூறியவனை தீயாய் முறைத்தான் கார்த்திக்....

மச்சான்.... இன்னைக்கி நம்ம பியூட்டி கம்பெனில ஒரு மீட்டிங் இருக்கு டா.... சீக்கிரம் ரெடி ஆகிட்டு கீழ வா.... நா வெயிட் பண்றேன்... சசீக்கிரம் வந்து தொல டா ரணதீரா என்று கூறிக்கொண்டே கீழே சென்றான் கார்த்திக்....

வேர்வையால் நனைந்த உடலை துண்டால் ஒற்றி எடுத்தவன் குளியலைக்குள் புகுந்து கொண்டான்....

❤️❤️❤️❤️

காலையில் அர்ச்சனை நடந்து கொண்டிருந்தது.... கோவிலில் அல்ல நம் ஹீரோயினி குடும்பத்தில் தான்.... வேற யாருக்கு நம் ரதிக்கு தான் 😁😁

ஏய்.... காலைலயே என் பொண்ண ஏன் டி திட்டிட்டு இருக்க என்ற கணவனை முறைத்த தேவி தன்னுடைய அர்ச்சனையை அவருக்கும் தொடர்ந்தார்.... நீங்க செல்லம் கொடுத்து தான் அவ இவ்ளோ நேரம் ஆகியும் தூங்கிட்டு இருக்குறா.... காலேஜ்க்கு நேரம் ஆகுதுல.... நீங்களும் திட்டுறது இல்ல.... என்னையும் திட்ட விடுறது இல்ல.... போதாதுக்கு அவ அண்ணே வேற.... தங்கச்சி தங்கச்சினு உயிர விடுறான்.... இப்டி எல்லாரும் செல்லம் கொடுத்தா அவ போற இடத்துல எப்டி சமாளிப்பா  என்று கரிச்சி கொட்டியவரிடம் எல்லாம் சரி ஆகிடும்  மா.... பொம்பள புள்ளைங்க பொறந்த வீட்டுல தான் சந்தோசமா இருப்பாங்க.... நீ அவளை திட்டாத... நா வயலுக்கு போய்ட்டு வந்துடுறேன் என்று கிளம்பி சென்றார் கணேசன்...

கையில் வாட்சை கட்டியப்படி அங்கே வந்த நிவி ( நிவேதா).... மா.... அக்கா நேத்தே எல்லாம் படிச்சிட்டா.... சமாளிச்சிப்பா.... நீ ஏன் பொலம்புர என்று கேட்டவளை.... என்ன டி ஒளறுற.... அவ படிச்சாளா இல்லையானு யாரு கேட்டா இப்போ...
நீ தான மா சொன்ன.... போற இடத்துல எப்டி சமாளிப்பா னு கேட்ட.... காலேஜ்க்கு தான போறா... படிச்சிட்டா... டெஸ்ட் வச்சா கூட சமாளிச்சிப்பா என்றவளை கரண்டி கொண்டு அடிக்க சென்றார் தேவி...

ஓடி சென்று அண்ணன் பின்னால் ஒழிந்தவள். மா நா சரியா தான சொன்னே.... ஏன் கோவப்படுற என்றவளை சிரித்து கொண்டே காப்பாற்றிய மாறன்.... நிவி குட்டி...போற இடம் னு அம்மா சொன்னது அவ கல்யாணம் பண்ணி போற இடம் டா குட்டி.... காலேஜ்க்கு இல்ல.... சிரித்து கொண்டே கூறியவன் அம்மா விடு மா.... அவ சின்ன பொண்ணு என்றவனை இப்டியே நீ செல்லம் கொடு டா.... யாரும் எதுவும் சொல்ல விடாதீங்க.... கோவமாக சமையல் அறைக்குள் புகுந்தார் தேவி....

❣️❣️❣️❣️

தீரன் :டேய்ய் கார்த்தி.... அது என்ன டா கைல... பக்கத்துல எங்கையாவது  சோறு போடுறாங்களா என்ன

கார்த்தி : என்ன டா கிண்டலா

தீரன் : இவ்ளோ சீக்கிரம் கண்டுபிடிச்சிட்டியா.... சரி எதுக்கு அத வச்சிருக்க.... சொல்லு

கார்த்தி : மச்சான்.... நம்ம கம்பெனிக்கு போற வழியில என் அத்த வீட்டுக்கு போய்ட்டு போவோம் டா... என் அம்மா மாவு கொடுத்து விட்டாங்க.... கொடுத்துட்டு போய்டலாம் டா...
(கெஞ்சலாக சொன்னான் )

தீரன் : நீ போ.... நா எதுக்கு.... வண்டிய விட்டு இறங்கி போ டா.... எரும....

கார்த்தி : மச்சான் மச்சான் ப்ளீஸ் டா.... எனக்காக.... உடனே வந்துடலாம் டா... ப்ளீஸ்

தீரன் : டேய் ஆபீஸ்க்கு லேட் ஆகுது டா... ( கார்த்தியை பார்த்தாவாரு ) சரி சரி மூஞ்ச அப்டி வைக்காத... வந்து தொலையுறேன்....

கார்த்தி : இஇஇ.... தேங்க்ஸ் மச்சான்

❣️❣️❣️

( அங்கு அவனுக்கு காத்திருக்கும் அதிர்ச்சியை அறியாமல் சென்றான் தீரன் )  

                                                   --- தொடரும்

அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚Tahanan ng mga kuwento. Tumuklas ngayon