ஏய் பொண்டாட்டி என்ற குரலை கேட்டதும் திரும்பி பார்த்தவள்.... அவன் நடந்து வரும் அழகை இமைக்க மறந்து பார்த்தாள்....
ஒரு நொடியில் தான் செய்வது தப்பு என்று திருத்தி கொண்டவள் அவனை கண்டுக்காமல் திரும்பி நடந்து சென்றாள்.... ஏய் பொண்டாட்டி.... நில்லு டி என இரண்டு எட்டில் அவள் அருகில் சென்றவன் அவள் கையை பிடித்து நிறுத்தினான்....
சார் என்ன பண்றீங்க.... விடுங்க என தன் கையை உருவ முயற்சி செய்து கொண்டிருந்தாள் நிலா .... ஆனால் உடும்பு பிடியாக தீரன் பிடித்திருந்ததால் கையை உருவ முடியாமல் போனது....ஏன் டி இப்டி மான் மாதிரி துள்ளிட்டே இருக்குற என அவள் அருகில் நெருங்கியவன் அவள் கழுத்தில் புதைந்து அந்த வாசத்தை தன்னுள் இழுத்தான்....அவன் செயலில் கண்களை இறுக்க மூடி நின்றவள் தன்னையும் அறியாமல் அவன் சட்டையை இறுக பற்றி கொண்டாள்.... முதல் முதலில் ஒரு ஆணின் ஸ்பரிசம் தீண்ட சொக்கி தான் போனாள் பேதை....
தீரன் அவள் கழுத்திலிருந்து விடை பெற்றதை கூட அறியாதவள் கண்கள் மூடிய படியே சொக்கி நிற்க....
இதழ் மடித்து சிரித்த தீரனோ அவள் காதருகில் சென்று " என்ன டி இதுக்கே மயங்கி போய் நிக்குற என கேக்க
அதில் அதிர்ந்து சுயத்திற்கு வந்தவள் அவனிடமிருந்து இரண்டடி தள்ளி நின்றாள்....
வேகமாக திரும்பி கொண்டு நடந்து சென்றவள் காதில் விழுமாறு கூறினான் தீரன் " இப்போ என் பொண்டாட்டி நிக்கலன்னா இந்த சர்ச் முன்னாடியே அவள எனக்கு சொந்தமாக்கிடுவேன் என கூறியதில் அதிர்ந்து நின்றாள் நிலா.... அவள் இதயமோ தாறுமாறாக அடித்து கொள்ள அவள் அருகில் வந்த தீரனோ அவளை திருப்பி "நிலா.... மறுபடியும் சொல்றேன்.... நா உன்ன காதலிக்கிறேன்.... உன்கூட வாழனும் னு ஆசைப்படுறேன்.... யாருமே எனக்கு வேண்டானு இருந்தேன்.... உன்ன பாத்த பிறகு தான் நீ என் கூட இருக்கனும் னு ஆச வந்திச்சி.... வாழுற ஒவ்வொரு நொடியையும் உன்கூட வாழ ஆசைப்படுறேன்.... என்ன விட்டு விலகனும் னு நினைக்காத.... அது உன்னால முடியாது.... இந்த தீரன் அப்டிலாம் உன்ன ஈஸியா விட்டுற மாட்டான்.... எனக்கு நீ வேணும்.... உன் காதல நா அனுபவிக்கனும்.... நா மட்டும் தான் அனுபவிக்கனும்.... இதுக்கு இடையில யாரு வந்தாலும் கொன்னே போட்ருவேன்.... என அவள் கண்களை பார்த்து கூறினான் தீரன்....
YOU ARE READING
அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚
Short Storyஇது ஒரு அழகான காதல் கதை.... காதலுக்கு அழகு முக்கியம் இல்லை.... மனது தான் முக்கியம் என்பதை பெண்ணவளுக்கும்.... காதல் எப்பேர்ப்பட்ட மனிதனையும் மாற்றும் என்பதை ஆணவனுக்கும் உணர்த்தும் கதை