பாகம் -13

467 6 18
                                    

தன்னால் ஒருத்தி அழுது துடிக்கிறாள் என தெரியாத தீரனோ அவளை தன் அலைபேசியில் பார்த்து சிரித்து கொண்டிருந்தான்....
அப்பொழுது கார்த்தி உள்ளே வர " என்ன டா பேசுனியா உன் ஆளு கிட்ட என கேக்க

ம்ம்ம்.... பேசுனே.... அவ தான் எதிர்பாக்கவே இல்ல.... நா பேசுவேன் னு.... கட் பண்ணிட்டா என தீரன் கூறினான்....

சரி ஓகே டா.... எப்போ உன் லவ்வ சொல்ல போற கார்த்தி கேக்க

சொல்றேன் டா.... சீக்கிரமே சொல்றேன்

மச்சா.... ஆனா ரொம்ப கஷ்ட்டம் டா.... கண்டிப்பா அக்ஸப்ட் பண்ணிக்க மாட்டா டா.... இப்பவே அவ என்ன நிலைமைல இருக்குறாளோ தெரியல.... ஆனா என்ன நடந்தாலும் அவள விட்டுற மாட்டல்ல என நிலா மேல் உள்ள அக்கறையில் கார்த்தி கேக்க...

அவனை அணைத்தவனோ கண்டிப்பா விட்டுற மாட்டேன் டா.... சந்தோசமா இருப்பா.... நீ கவலைப்படாத என கூறினான்....
பிறகு இருவரும் சிறிது நேரம் ஆபீஸ் பத்தி பேசி விட்டு பார்ட்டிக்கு செல்ல கிளம்பினர்.....

*************************
அங்கே அழுது முடித்த நிலா முகம் கழுவி விட்டு தனது அறையிலிருந்து வெளியே வந்தாள்.... வந்தவள் நிவியை தேட.... அவள் தன் பாட சம்மந்தமாக நோட்டில் ஏதோ எழுதி கொண்டிருந்தாள்.....
அவள் தன் முகத்தை பார்த்தால் கண்டிப்பாக எதாவது கேப்பாள் என நினைத்து மாடியிலிருந்தே நிவி " டைம் ஆச்சி டி.... கெளம்பு என கூறினாள்

எரிச்சலா வருது.... அங்க நாம கண்டிப்பா போகணுமா நிலா என எழுதி கொண்டே கேக்க

ப்ளீஸ் டி.... போய்ட்டு வந்துடலாம்.... நீ வரலைன்னா சொல்லு.... நானே தனியா போய்ட்டு வந்துடுறேன் என தலையை கீழே தொங்க போட்டு கொண்டே கூற....

சரி டி வரேன்.... அந்த மூதேவி இருக்குற இடத்துல உன்ன தனியா அனுப்ப முடியாது.... போய் கெளம்பு.... நா வரேன்.... உன் போன் கொஞ்சோ தா என கூற

நா குளிக்க போறேன்.... நீ செல்ல எடுத்துக்க என கூறி கெளம்ப சென்றாள்

நிவி அவள் போனை எடுத்து ஒருவரிடம் பேசி விட்டு.... அவளும் கிளம்ப சென்றாள்

அக்னியை ஆளும் அக அழகி 🔥❤️🌚Where stories live. Discover now