பகுதி 48

6.5K 221 105
                                    

பகுதி 48

கௌஷிக் இல்லம்

"ம்.... பப்பா வெல் செட்டில்ட் பட் எல்லாரும் கொஞ்சம் மூடியா இருக்காங்க..."

..........

"ஹா..... ஹா.... அதை நா பாத்துக்குறேன்......"

.......

"புரியுது  டேட்.... மம்மி எங்க ஒகே...  ஒகே....  ஆன்டியா அவங்கள சீக்கிரம்  வழிக்கு  கொண்டுவந்திடுவேன் டோன்ட் வொரி பப்பா   ...."

.......

"ஒகே பப்பா மம்மி வந்ததும் கால் பண்ண சொல்லுங்க....." என்று நேகா பேசிக்கொண்டே கையில் இருந்த கிரின் டீயை சுவைத்துக் கொண்டிருந்தாள்.  சோபாவில் அமர்ந்து பேசி கொண்டிருந்தவள் எழுந்து நிற்க திடிரென்று ஏதோ அவளை இடிக்க கையில் இருந்த டீ அவளுடைய உடையில் கொட்டிய வேகத்தில் பதட்டத்தில் மொபைலை கைதவர விட்டாள் அது கிழே விழந்து இரண்டாக உடைந்தது.

திரும்பி பார்த்தால் அஙகே  வானதி இருக்க மொபைல் உடைந்த ஆத்திரத்தில்  "ஏ குட்டி பிசாசே பாத்து வர மாட்ட".... என்று இரண்டு அடி முதுகில் போட அதற்க்குள்ளே அவள் பின்னால் ஜெஷ்வின் ஒடிவந்தான் அவன் பின்னால் கரண் வர  நேகா அடித்ததும் குழந்தையின் கண்களில் நீர்க்கோர்த்து கொண்டு கண் கலங்கி உதட்டை பிதிக்கியபடி   நின்றிருந்தாள். "என்ன வனிமா என்ன ஆச்சிடா ஏன் ஒருமாதிரி இருக்க கண்ணெல்லாம் கலங்கி இருக்கு!?!..." என்று  கரண் கேட்க

"அப்பா இந்த ஆன்டி வனிமாவ அடிச்சிட்டாங்க பா..... நான் பாத்தேன்..." என்று ஜெஷ்வின் கூற இது உண்மையா என்பது போல் நேகாவை பார்த்தான் கரண்.

அவளும் அதே ஆத்திரத்துடன் இருக்க கரண் குழந்தை பார்த்து "வனிமா என்னடா நேகா அடிச்சிட்டாங்களா என்று கேட்க கரண் காலை கட்டிக்கொண்ட வானதி  "பெரியப்பா நான் பாத்துதான் வந்தேன் இந்த ஆண்டி இந்தபக்கமா வந்தது தெரியாம மோதிட்டேன்" என்று அழுதாள் குழந்தை அழுதததும் நேகாவை முறைத்த கரண் "குழந்தை தெரியாம பண்ணதுக்கு யாரவது அடிப்பாங்களா!?!... குழந்தைய அடிக்க உனக்கு  எப்படி மனசு வருது?!?... சின்னபிள்ளைய  அடிப்பாங்களா ??"  என்று திட்ட

நின் முகம் கண்டேன். (Completed)Where stories live. Discover now