பகுதி 44

7.8K 276 177
                                    

பகுதி 44

விடியலின் போது உறங்கியவள் மறுநாள் குழந்தையின் சத்தம் கேட்டு எழுந்தாள்... பக்கத்தில் அவன் இல்லாமல் இருக்க சற்று நிம்மதியில் படுத்திருக்க மறுபடியும் வானதி "அம்மா" என்று அழைத்தாள். "எழுந்துட்டிங்களா குல்லு??.... வாடா மா.." என்று பக்கத்தில் அமர்த்திக்கொண்டு அப்படியே எழுந்து மகளின் மடியில் தலைவைத்து படுத்துக்கொண்டாள்.

தலைமுடியில் விரல்வைத்து அன்னை தனக்கு செய்வது போல் பூ போன்ற தன்பிஞ்சு விரல்களை வைத்து வருடிய வானதியின் கைகளை எடுத்து முத்தம் கொடுத்தவள் "நேற்றெல்லாம் அம்மாவ மிஸ் பண்ணிங்களா செல்லம்.... நைட் சாப்பிட்டிங்களா டா...... குல்லுமா இங்க எப்ப வந்து படுத்திங்க.... என்றாள் குழந்தையிடம்

"மிஸ் பண்ணேன்..." வானதி கூற குழந்தையின் கன்னத்தை தன் கன்னத்தோடு வைத்துக்கொண்டாள் வைஷு. "ஆனா சிண்டு என்னை பார்த்துக்கிட்டாங்க நான் திரும்பி ஈவினிங் வந்து பார்த்தேன். நீங்க தூங்கிட்டு இருந்திங்க சிண்டு வந்து உங்கள டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டார். அதனால கார்டன்ல விளையாடிட்டு இருந்தோம் மா...". இங்க இருக்க தாத்தா கூட அருணாச்சல தாத்தா போல என் கூட விளையாடுராரு மா.... ஆனா ஒரு ஆண்டி இருக்காங்க அவங்க பேரு கூட ம்..... நேகா அவங்க என்னை பார்த்த முறைச்சிட்டே இருக்காங்கமா" என்று கூற .... "நீ அவங்க இருக்கர பக்கம் போகதடா செல்லம்" என்று கன்னம் தட்டினாள் வைஷு. " அப்புறம் மீரா ஜெஸ்வீன் கூட ஹைடன் சீக் விளையாடினோம்..... மா தான்யா சத்யனும் இங்க இருந்திருந்தா இன்னும் ஜாலியா இருந்திருக்கும்ல? என்று கேள்வியாய் வானதி முடித்தாள்" மறுபடியும் தாயின் முடியை கோதியபடி "விளையாடிய பிறகும் வந்து பார்த்தேன் அப்பவும் தூங்கிட்டுதான் இருந்திங்க... பூஜா பெரியம்மா சத்தம் போடாதிங்க, அம்மாவ டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு அப்பா சொல்லி இருக்கார்லன்னு என்னை வெளிய கூட்டிட்டு போய் டின்னர் ஊட்டி விட்டாங்க... தாத்தா எங்க எல்லாருக்கும் கதை சொன்னார். நான் அப்படியே தூங்கிட்டேன் மா.... ஆனா நான் எப்படிமா இங்க வந்தேன் !?!....". என்று தாயை பார்த்து கேட்க

நின் முகம் கண்டேன். (Completed)Onde histórias criam vida. Descubra agora