சென்னை
அத்தம்மா இந்தங்க காபி
நானே கேக்கனுமுன்னு நினைச்சிட்டு இருந்தேன் ரொம்ப தேங்கஸ் டா தலை வலிக்குது ஒரு காபி குடிச்சா தேவலாம் போல இருந்தது நீயே கொண்டுவந்துட்ட என்று காபியை எடுத்துக்கொண்டார் தாரா
ஏன் அத்தம்மா ரொம்ப தலை வலிக்குதா வாங்க ஆஸ்பிட்டல் போய்ட்டு வந்திடலாம் என்று வைஷாலி அழைக்க
அதெல்லாம் வேணாம்மா சூடா காபி குடிச்ச தலைவலி பறந்து போய்டும் சரி உன் புருஷன் எங்க மணி 5 ஆக போகுது இன்னும் ஆள காணும் லேட்டா வருவேன்னு ஏதாவது சொல்லி இருந்தானாமா???? ஷாப்பிங் போகனுமுன்னு அவனுக்கு நியாபக படுத்துனியா இல்லையா???
காலைல போகும்போது சொல்லிதான் அனுப்பினேன் அத்தமா சரி சரின்னு சொன்னாறு லேட்டாகுமுன்னு எதுவும் சொல்லிட்டு போகலையே என்று யோசனையோடு கூறினாள் வைஷாலி
சரி டா வந்துடுவேன்னு சொல்லி இருந்தா நிச்சயமா வந்திடுவான்
நித்யமல்லிய கட்டி வைச்சிருக்கேன் பாரு அதை எடுத்து வைச்சிட்டு
ரெடியா இரு வந்தவுடனே அவன கிளப்பி கூட்டிட்டு போய்ட்டு அப்படியே பார்க் பீச்சின்னு போய்ட்டு வாங்க முடிஞ்ச அளவு டின்னர் ஹோட்டலுக்கு போறா போல பாத்துக்க வீட்டுல நா இருப்பேன். நான் இருப்பேன்னு அரக்க பரக்க ஒடிவராதா புரியுதா நல்லா சந்தோஷமா என்ஜாய் பண்ணணும் என்று கண் அடித்து கூறினார் தாரா.போங்க அத்தமா என்று அவர் கொடுத்த காபி டம்பளரை வாங்கிகொண்டே உள்ளே ஒடிவிட்டாள் மருமகள்.
சரியாக 15நிமிடத்தில் வந்தவன் வரும்போதே தாயை ஹாலில் பார்த்து சோபாவில் அமர்ந்தவன் ஷாலு ஒரு கப் ஸ்டராங் காபி மா என்று கூறி உள்ளிருக்கும் மனைவிக்கு குரல் கொடுத்தான்
அவன் கூறி முடிக்கும் முன்னே காபி டம்பளருடன் அவன் எதிரில் வந்து நின்றாள் வைஷாலி. சிரித்தபடியே அதை வாங்கி மனைவியை பார்வையாலேயே அளந்தவன் ஓ ரெடியாதான் இருக்கியா ஒன்லி 10 மினிட்ஸ் இப்போ வந்துடுறேன் என்று காபியை வாங்கினான் .
BINABASA MO ANG
நின் முகம் கண்டேன். (Completed)
General Fictionஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....